close
Choose your channels

'பாகுபலி' வதந்திக்கு முற்றுப்புள்ளி வைத்த ராஜமவுலி

Sunday, October 25, 2015 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

ஹாலிவுட் படங்களின் பிரமாண்டங்களை மட்டுமே பார்த்து ரசித்த நமது ரசிகர்களுக்கு ஹாலிவுட் தரத்தில் ஒரு படத்தை கொடுத்ததோடு, உலகையே திரும்பி பார்க்க வைத்த ஒரு இயக்குனர் எஸ்.எஸ்.ராஜமவுலி. இவர் இயக்கிய இந்தியாவின் மிகப்பெரிய பட்ஜெட் படமான 'பாகுபலி' உலகம் முழுவதும் பெரும் வரவேற்பை பெற்று ரூ.600 கோடிக்கும் மேல் வசூல் செய்தது. இந்நிலையில் இந்த படத்தின் இரண்டாம் பாகத்தை இயக்கும் ஆரம்பகட்ட பணிகளில் எஸ்.எஸ்.ராஜமவுலி தீவிரமாக உள்ளார்.

இந்நிலையில் 'பாகுபலி' இரண்டாம் பாகத்தை அடுத்து 'பாகுபலி' மூன்றாம் பாகத்தை இயக்க ராஜமவுலி திட்டமிட்டுள்ளதாக கடந்த சில நாட்களாக இணையதளங்களிலும் சமூக வலைத்தளங்களிலும் செய்திகள் வெளிவந்தது. இதுகுறித்து எஸ்.எஸ்.ராஜமவுலி தனது சமூக வலைத்தளத்தில் விளக்கம் அளித்துள்ளார்.

'பாகுபலி 3' படம் குறித்து பல வதந்திகள் இணையத்தில் பரவி வருகிறது. இந்த படத்தை இரண்டாம் பாகத்திற்கு மேல் கொண்டு செல்ல நான் விரும்பவில்லை. எனவே 'பாகுபலி' மூன்றாம் பாகம் குறித்த வதந்திகளை பரப்ப வேண்டாம்' என்று கூறியுள்ளார். இந்த விளக்கத்தின் மூலம் 'பாகுபலி' மூன்றாம் பாகம் குறித்த வதந்திகளுக்கு முற்றுப்புள்ளி வைக்கப்பட்டது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.   

Comments

Welcome to IndiaGlitz comments! Please keep conversations courteous and relevant to the topic. To ensure productive and respectful discussions, you may see comments from our Community Managers, marked with an "IndiaGlitz Staff" label. For more details, refer to our community guidelines.
settings
Login to post comment
Cancel
Comment