ரூ.1000 கோடியை டார்கெட் செய்யும் எஸ்.எஸ்.ராஜமவுலி

  • IndiaGlitz, [Tuesday,December 15 2015]

இந்தியாவின் மிக அதிக பட்ஜெட் படம் என்ற புகழ் பெற்ற 'பாகுபலி' திரைப்படம் உலகம் முழுவதும் சக்கைபோடு போட்டு ரூ.500 கோடிக்கும் அதிகமாக வசூல் செய்து அனைவரையும் ஆச்சரியப்படுத்திய நிலையில் இந்த படத்தின் இரண்டாம் பாகத்தின் படப்பிடிப்பு விரைவில் தொடங்கவுள்ளது.

முதல் பாகம் ரூ.500 கோடி செய்ததை அடுத்து இரண்டாவது பாகத்தை ரூ.1000 கோடி வசூல் செய்யும்படி செய்ய வேண்டும் என ராஜமவுலி உள்பட படக்குழுவினர் தீவிரமாக இருப்பதாக கூறப்படுகிறது.

கட்டப்பா ஏன் பாகுபலியை கொலை செய்தார்? என்பதை தெரிந்து கொள்ள கண்டிப்பாக முதல்பாகத்தை பார்த்தவர்கள் அனைவரும் இரண்டாம் பாகத்தை பார்க்க வாய்ப்பு இருப்பதாகவும், அதுமட்டுமின்றி தியேட்டருக்கு சென்று படமே பார்க்காதவர்கள் கூட 'பாகுபலி' படத்தை பார்த்துள்ளதால் இரண்டாம் பாகத்திற்கு பெரும் எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளதாகவும் இதன் காரணமாக 'பாகுபலி 2' படம் கண்டிப்பாக முதல் பாகத்தை விட இருமடங்கு வசூல் செய்யும் வாய்ப்பு இருப்பதாக கூறப்படுகிறது.

More News

சிம்பு-அனிருத் பாடல் குறித்து விஜய் கூறியது என்ன?

அனிருத் இசையமைப்பில் சிம்பு பாடியதாக கூறப்படும் 'பீப் பாடல்' குறித்த சர்ச்சை நாளுக்கு நாள் வலுத்து வருகிறது....

விஜய்சேதுபதியின் 'சேதுபதி' படப்பிடிப்பு முடிந்தது

சமீபத்தில் விஜய்சேதுபதி, நயன்தாரா நடித்த 'நானும் ரவுடிதான்' திரைப்படம் சூப்பர் ஹிட் ஆகியதை தொடர்ந்து அவர் நடித்து வரும் அடுத்த படமான 'சேதுபதி' படத்தின் படப்பிடிப்பு நேற்றுடன் முடிவடைந்தது...

சென்னை வெள்ள பாதிப்பு. அப்துல்கலாம் அன்றே கூறினார். விவேக்

சென்னையில் வரலாறு காணாத வகையில் கனமழை மற்றும் வெள்ளம் ஏற்பட்டு சென்னையின்...

சென்னை வெள்ள நிவாரணம்: ரம்பா, எம்.எஸ்,பாஸ்கர் நிதியுதவி

வெள்ள பாதிப்பினால் சென்னைக்கு ஏற்பட்ட துயரை துடைக்க இந்திய திரையுலகமே திரண்டு வந்து நிதியுதவி...

சென்னையின் முக்கிய பகுதியை தத்தெடுத்த மணிரத்னம்-சுஹாசினி

சென்னையில் கடந்த சில நாட்களாக பெய்து வந்த கனமழை மற்றும் ஏரிகளில் உபரிநீர் திறந்ததால் ஏற்பட்ட வெள்ளம்...