நானும் ரவுடிதான்… வடிவேலு பாணியில் ஜெயிலுக்கு போகனுமா? அட்டகாசமான ஆஃபர்!

  • IndiaGlitz, [Friday,August 20 2021]

கடந்த 2006 ஆம் ஆண்டு சுந்தர்.சி நடிப்பில் வெளியான “தலைநகரம்” திரைப்படத்தில் நகைச்சுவை நடிகர் வடிவேலு, நானும் ரவுடிதான் என்று சொல்லிக்கொண்டு ஜெயிலுக்குப் போக ஆசைப்படுவார். உண்மையில் இப்படி எந்தக் குற்றமும் செய்யாமல் நீதிமன்றத்தின் படிகளில் நிற்காமல் ஜெயில் கம்பியை எண்ணுவதற்கு கர்நாடகச் சிறைத்துறை ஒரு அட்டகாசமான ஆஃபரை கொண்டுவந்துள்ளது.

இதன்படி ரூ.500 செலுத்திவிட்டால் போதுமானது. பெலகாவியில் உள்ள ஹிண்டல்கா சிறையில் நீங்கள் ஒருநாள் சிறை கைதியாக இருக்க முடியும். அதோடு மற்ற சிறை கைதிகளைப் போலவே உங்களுக்கு சீருடை, சாப்பாடு போன்றவற்றையும் கொடுப்பார்கள். மற்ற கைதிகள்  தோட்டவேலை, சமையல் வேலைகளைச் செய்வது போலவே நீங்களும் ஒருநாள் சிறை வாழ்க்கையை அனுபவிக்கலாம். மேலும் மற்ற கைதிகள் தரையில் படுத்துத் தூங்குவதைப் போலவே நீங்களும் சிறைக்குள் தூங்கி புது அனுபவத்தைப் பெறலாம்.

 இதுகுறித்து, சிறை வாழ்க்கை எப்படி இருக்கும் என்று பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் “கைதியின் வாழ்வில் ஒருநாள்“ எனும் இந்தப் புது திட்டத்தை அறிமுகப்படுத்த உள்ளதாக சிறை அதிகாரிகள் கருத்துத் தெரிவித்து உள்ளனர். மேலும் இந்த அனுபவத்தின் மூலம் குற்றங்கள் குறையும் என்று நம்புவதாகவும்  அவர்கள் கூறியுள்ளனர்.

இந்நிலையில் பெலகாவியில் இந்த ஹிண்டல்கா சிறையில் 500க்கும் மேற்பட்ட ஆயுள் கைதிகள் மற்றும் விசாரணை கைதிகள் இருப்பதாகக் கூறப்படுகிறது. இந்நிலையில் ரூ.500 செலுத்தி ஒருநாள் சிறையில் தங்கும் புது திட்டத்திற்கு கர்நாடக அரசாங்கம் விரைவில் ஒப்புதல் அளிக்கும் எனவும் அதிகாரிகள் தகவல் வெளியிட்டு உள்ளனர்.

More News

கல்விக்கு ஏது வயது? 86 வயதில் 10 ஆம் வகுப்பு தேர்வை எழுதிய முன்னாள் முதல்வர்!

ஹரியாணா மாநிலத்தில் முன்னாள் முதல்வராக பதவிவகித்த ஓம் பிரகாஷ் சவுதாலா தற்போது தனது 86 ஆவது வயதில் 10 ஆம் வகுப்பு ஆங்கிலத்தைத் தேர்வை வெற்றிக்கரமாக எழுதி முடித்துள்ளார்.

தமிழில் டப் செய்வதை நிறுத்திய 'மார்வெல் ஸ்டுடியோவின் அடுத்த படம்: காரணம் என்ன?

கிட்டத்தட்ட அனைத்து ஹாலிவுட் படங்களும் இந்திய மொழிகளில் வெளியாகி வருகின்றன என்பதும் குறிப்பாக தமிழ் மொழியில் வெளியாகாத ஹாலிவுட் படங்களே இல்லை என்று கூறலாம்.

'கே.ஜி.எஃப் 2' ரிலீஸ் குறித்த முக்கிய தகவல்!

பிரபல கன்னட நடிகர் யாஷ் நடித்த 'கேஜிஎப்' திரைப்படம் கடந்த 2018ஆம் ஆண்டு வெளியாகி மிகப்பெரிய வெற்றி பெற்றது என்பது தெரிந்ததே. இந்த நிலையில் இந்த படத்தின் இரண்டாம் பாகமான 'கே.ஜி.எஃப் 2' தற்போது

அரசு மருத்துவமனையில் குழந்தைப் பெற்றுக்கொண்ட சப்-கலெக்டர்… குவியும் பாராட்டு!

கேரளாவில் பணியாற்றிவரும் சப்-கலெக்டர் ஒருவர் சேலம் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று அழகான பெண் குழந்தையைப் பெற்றெடுத்துள்ளார்

முதலமைச்சரை நேரில் சந்தித்த விஜய்சேதுபதி: முக்கிய கோரிக்கை வைத்ததாக தகவல்!

முதலமைச்சரை நேரில் சந்தித்த மக்கள் செல்வன் விஜய் சேதுபதி முக்கிய கோரிக்கை ஒன்றை வைத்ததாக தகவல் வெளிவந்துள்ளது