தமிழகத்தில் நிவர் புயலின் தாக்கம் எப்படி இருக்கும்??? இந்திய வானிலையின் விரிவான அறிக்கை!!!


Send us your feedback to audioarticles@vaarta.com


வங்காள விரிகுடா பகுதியில் உள்ள தமிழகத்தின் கடற்கரைப் பகுதியில் உருவாகி இருக்கும் குறைந்த காற்றழுத்தம் காரணமாக அடுத்த 12 மணி நேரத்துக்குள் அது குறைந்த அழுத்தமாகவும் அதுவே 24 மணி நேரத்தில் புயலாகவும் உருவாகும் என இந்திய வானிலை ஆய்வு மையம் தகவல் வெளியிட்டு உள்ளது. இந்தப் புயல் 18 கிலோ மீட்டர் வேகத்தில் கரையை நோக்கி நகர்ந்து கொண்டு இருக்கிறது எனவும் இந்திய வானிலை ஆய்வு மையம் குறிப்பிட்டு உள்ளது.
இதன் காரணமாக இன்று முதலே தமிழகத்தின் கடற்கரை மாவட்டங்களில் மழை பெய்ய தொடங்கிவிடும் என அதிகாரிகள் தெரிவித்து உள்ளனர். நாளை மற்றும் புதன் கிழமைகளில் தமிழகத்தின் சில கடற்கரை மாவட்டங்களில் கனமழை மதல் மிக கனமழை பெய்யலாம் எனவும் எதிர்ப்பார்க்கப் படுகிறது. இந்தப் புயல் சீற்றம் காரணமாக வரும் நவம்பர் 25 ஆம் தேதி வரை மீனவர்கள் கடலுக்கு செல்ல வேண்டாம் என்று சென்னை வானிலை ஆய்வு மையத்தின் துணை இயக்குநர் எஸ்.பாலச்சந்திரன் தெரிவித்து உள்ளார்.
நிவர் புயல் காரணமாக தமிழகத்தில் வரும் நவம்பர் 24 ஆம் தேதி அன்று ஆரஞ்சு எச்சரிக்கையும், நவம்பர் 25 ஆம் தேதி சிவப்பு நிற எச்சரிக்கையும் விடுக்கப்பட்டு உள்ளது. இந்த புயலின் காரணமாக மக்களின் வீடுகளும் சொத்துகளும் கடுமையாகச் சேதப்படும். எனவே பாதிப்பு உள்ள பகுதிகளில் மக்கள் சாதுரியமாகச் செயல்பட வேண்டியது மிகவும் அவசியம். இதனால் மக்கள் குடிப்பதற்கு தேவையான நீரை போதுமான அளவு சேமித்து வைத்துக் கொள்ளுமாறு மாநில பேரிடர் மேலாண்மை ஆணையம் கேட்டுக் கொண்டு உள்ளது என்பதும் குறிப்பிடத்தக்கது.
இதற்கு முன்னதாக நிவர் புயலைப் பற்றி தகவல் அளித்த சென்னை வெதன்மேன் இந்தப் புயல் 2 விதமாக கரையைக் கடக்க வாய்ப்பு இருக்கிறது எனக் கூறி இருந்தார். அதில் வேதாரண்யம்-காரைக்காலுக்கு மத்தியில் 24 அல்லது 25 ஆம் தேதிகளில் நிவர் புயல் கரையைக் கடக்கலாம். அப்போது காற்றின் வேகம் மணிக்கு 70-80 கி.மீ ஆக இருக்கும். இதனால் திருவாரூர், திருச்சி, நாமக்கல், சேலம், விழுப்புரம், திருவண்ணாமலை, கள்ளக்குறிச்சி, வேலூர், கடலூர், பாண்டிச்சேரி, சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், ராணிப்பேட்டை, செங்கல்பட்டு போன்ற மாவட்டங்களில் மிக கனமழை பெய்யக்கூடும் எனத் தெரிவித்து இருந்தார். மேலும் நாகப்பட்டினம், தஞ்சாவூர், பெரம்பலூர், அரியலூர், காரைக்கால் போன்ற மாவட்டங்களில் கனமழை பெய்யும் எனவும் தெரிவித்தார்.
இன்னொரு விதமாக காரைக்கால்-சென்னைக்கு மத்தியில் 24-25 ஆம் தேதிகளில் நிவர் புயல் கரையைக் கடக்கும். அது மணிக்கு 120-150 கிலோ மீட்டர் வேகத்தில் காற்றாக வீசும். கள்ளக்குறிச்சி, நாகப்பட்டினம், காரைக்கால், பெரம்பலூர், அரியலூர் போன்ற மாவட்டங்களில் மிகக் கனமழை பெய்யலாம். மேலும் கடலூர், பாண்டிச்சேரி, விழுப்புரம், சென்னை, காஞ்சிபுரம், வேலூர், திருவண்ணாமலை, ராணிப்பேட்டை, செங்கல்பட்டு பகுதிகளில் கனமழை பெய்யும் எனக் கூறி இருந்தார்.
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
Comments
- logoutLogout
