ரயில் கழிவறை நீரை டீயில் கலந்த விவகாரம்: ரயில்வே நிர்வாகம் எடுத்த அதிரடி நடவடிக்கை

  • IndiaGlitz, [Friday,May 04 2018]

ரயில் கழிப்பறையில் உள்ள தண்ணீரை தேநீர் தயாரிக்க எடுத்த டீ விற்பனையாளர் வீடியோ ஒன்று கடந்த இரண்டு நாட்களாக சமூக வலைத்தளங்களில் வைரலாகி ரயில் பயணிகளிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இந்த காட்சியைக் கண்ட ரயில் பயணி ஒருவர், எதற்காக கழிவறை நீரை தேநீர் கேனில் பிடித்துச் செல்கிறீர்கள் என்று கேட்டதற்கு, எந்த தவறும் நாங்கள் செய்யவில்லை என்று கூறிக்கொண்டே அவர்கள் நகர்ந்து சென்றதும் அந்த வீடியோவில் பதிவாகியுள்ளது.

கடந்த டிசம்பர் மாதம்  சென்னையில் சென்ட்ரல் ரயில் நிலையத்தில் இருந்து ஹைதராபாத் செல்லும் சார்மினார் எக்ஸ்பிரஸ் ரயில், செகந்திராபாத் ரயில் நிலையத்தில் நின்று கொண்டு இருந்தபோது இந்த சம்பவம் நடந்துள்ளது. இதுகுறித்த வீடியோ வைரலாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்திய நிலையில் இதுகுறித்த விசாரணைக்கு ரயில்வே துறை உத்தரவிட்டது.

இந்த உத்தரவின்படி நடந்த விசாரணையில் கழிவறை நீரை தேநீர் கேனில் பிடித்துச் சென்ற இரண்டு ஊழியர்களும், காசிப்பேட் பி. சிவபிரசாத் என்ற ஒப்பந்ததாரிடம் பணியாற்றும் ஊழியர்கள் என்பது உறுதியானது. இதனையடுத்து உணவுகளை சுகாதாரக்கேட்டுடன் தயாரித்த ஒப்பந்ததாரர் சிவபிரசாத் என்பவருக்கு ஒரு லட்ச ரூபாய் அபராதம் விதிக்கப்பட்டது. மேலும் தண்ணீர் கலந்த அந்த இரண்டு ஊழியர்களும்,  நிரந்தரஊழியர்கள் இல்லை என்பதும் தெரியவந்தது. இதையடுத்து, அங்கீகாரமற்ற வகையில், செகந்திராபாத் ரயில்நிலையத்தில், விற்பனையில் ஈடுபட்டு இருந்த பலர் நீக்கப்பட்டுள்ளதாக ரயில்வே துறை அறிவித்துள்ளது.

More News

நீட்டிற்காக செல்லும் மாணவர்களுக்கு உதவிக்கரம் நீட்டும் ராஜஸ்தான் தமிழ் சங்கம்

மருத்துவ படிப்பு படிக்கவிருக்கும் மாணவர்களுக்கான நீட் தேர்வு வரும் 6ஆம் தேதி இந்தியா முழுவதும் நடைபெறவுள்ளது.

அஜித்துக்கு கிடைத்த பெருமைக்குரிய பதவி

தல அஜித் நடிப்பு மட்டுமின்றி மோட்டார் சைக்கிள் ரேஸ், கார் ரேஸ் உள்பட பல விஷயங்களில் ஆர்வம் காட்டுபவர் என்பது தெரிந்ததே.

கமல் கட்சியின் முதல் விசில் இதுதான்

உலக நாயகன் கமல்ஹாசன் சமீபத்தில் விசில் என்ற செயலியை அறிமுகம் செய்தார் என்பதை ஏற்கனவே பார்த்தோம்.

தேசிய விருது புறக்கணிப்பு குறித்து பாரதிராஜா

சமீபத்தில் திரைப்பட கலைஞர்களுக்கான தேசிய விருது அறிவிக்கப்பட்டது என்பது தெரிந்ததே. இந்த ஆண்டு தமிழ் படங்களுக்கு வெறும் நான்கே விருதுகள் மட்டுமே கிடைத்தது.

விவாகரத்து ஆன மனைவியுடன் மீண்டும் இணையும் பிரபல நடிகர்?

பிரபல பாலிவுட் நடிகர் ஹிருத்திக் ரோஷன், சூசன் என்பவரை கடந்த 2000ஆம் ஆண்டு திருமணம் செய்தார். இந்த தம்பதிக்கு ரிஹான், ரிதான் ஆகிய இரண்டு மகன்கள் உள்ளனர்.