பளுதூக்கும் போட்டியில் மேலும் ஒரு தங்கம்: இந்தியா அசத்தல்

  • IndiaGlitz, [Saturday,April 07 2018]

ஆஸ்திரேலியாவில் நடைபெற்று வரும் காமன்வெல்த் போட்டியில் பளுதூக்கும் போட்டியில் உள்ள அனைத்து பிரிவுகளிலும் இந்தியா தங்கம் பெற்றுவிடும்போல் தெரிகிறது.

ஏற்கனவே பளுதூக்கும் போட்டியில் 48 கிலோ பெண்கள் பிரிவில் மீராபாய் சானுவும், 53 கிலோ பெண்கள் பிரிவில் சஞ்சிதா பானுவும், 77 கிலோ ஆண்கள் பிரிவில் சதீஷ்குமாரும் தங்கம் வென்றுள்ள நிலையில் தற்போது 85 கிலோ எடைப்பிரிவிலும் இந்திய வீரருக்கு தங்கம் கிடைத்துள்ளது.

ஆந்திர மாநிலத்தை சேர்ந்த வெங்கட் ராகுல் 85 கிலோ பளுதூக்கும் எடைப்பிரிவில் தங்கம் வென்று இந்தியாவுக்கு 4வது தங்கத்தை பெற்று கொடுத்துள்ளார். இவர் மொத்தம் 338 கிலோ எடை தூக்கி சாதனை புரிந்துள்ளார். 4வது தங்கம் பெற்று கொடுத்த ராகுலுக்கு வாழ்த்துக்கள் குவிந்து வருகிறது.

இந்த நிலையில் இந்தியா இதுவரை 4தங்கம், 1 வெள்ளி மற்றும் 1 வெண்கலம் என மொத்தம் 6 பதக்கங்களை வென்றுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது

More News

சல்மான்கான் ஜாமீன் மனு: ஜோத்பூர் நீதிமன்றம் அதிரடி உத்தரவு

அரியவகை மான்களை வேட்டையாடிய வழக்கில் ஐந்து ஆண்டுகள் சிறை தண்டனை பெற்று சிறையில் இருக்கும் சல்மான்கானின் ஜாமீன் மனு இன்று விசாரணை செய்யப்படும் என நேற்று அறிவிக்கப்பட்டது.

சினிமாவில் உலக நாயகன்: அரசியலில் நகைச்சுவை நாயகன்; செல்லூர் ராஜூ

தமிழக அமைச்சர்களில் நெட்டிசன்களால் அதிகம் கலாய்க்கப்பட்டவர் அமைச்சர் செல்லூர் ராஜு தான் என்பது அனைவரும் அறிந்ததே. குறிப்பாக தெர்மோகோல் குறித்த மீம்ஸ்கள் பல நாட்கள் டுவிட்டரில் டிரெண்ட்டாக இருந்தது

தனுஷின் அடுத்த படத்தில் பியர்ஸ் பிராஸ்னன்?

தனுஷ் இயக்கத்தில் கார்த்திக் சுப்புராஜ் ஒரு படத்தை இயக்குவதாக கடந்த ஆண்டு அறிவிப்பு வெளியானது. இந்த படத்தில் ஒருசில ஹாலிவுட் நடிகர்களும் நடிக்கவுள்ளதாக அப்போதே கூறப்பட்டது

தனுஷ் படத்தில் குஷ்பு அல்லது ரம்யாகிருஷ்ணன்?

தனுஷ் இயக்கத்தில் ராஜ்கிரண், ரேவதி நடித்த பா.பாண்டி திரைப்படம் நல்ல வரவேற்பையும் வசூலையும் பெற்றது என்பது தெரிந்ததே. இந்த நிலையில் இந்த படம் தற்போது கன்னடத்தில் ரீமேக் செய்யப்படவுள்ளது.

சிம்புவுடன் இணைந்து பணியாற்றிய அனுபவம் குறித்து சிவகார்த்திகேயன்

தமிழ் திரையுலகின் முன்னணி நடிகர்களின் பட்டியலில் இணைந்துவிட்ட சிவகார்த்திகேயன் ஒருசில வருடங்களுக்கு முன் தான் சிம்பு படத்தில் பணியாற்றியதாக பேட்டி ஒன்றில் கூறியுள்ளார்.