காங்கிரஸ் கட்சியுடன் கூட்டணியா? ராகுல் சந்திப்புக்கு பின் கமல் பேட்டி

  • IndiaGlitz, [Wednesday,June 20 2018]

உலக நாயகனும் மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவருமான கமல்ஹாசன் இன்று மாலை டெல்லியில் காங்கிரஸ் கட்சியின் தலைவர் ராகுல்காந்தியை சந்தித்து பேசினார். இந்த சந்திப்புக்கு பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய கமல்ஹாசன், 'இந்த சந்திப்பு மரியாதை நிமித்த சந்திப்பு இன்றும் காங்கிரஸ் மற்றும் மக்கள் நீதி மய்யம் கட்சிகள் குறித்து பேசியதாக கூறினார். மேலும் ராகுல்காந்தியிடம் கூட்டணி குறித்த பேச்சுவார்த்தை எதுவும் பேசவில்லை என்றும் ஆனால் தமிழக அரசியல் குறித்து விரிவாக பேசியதாகவும் அவர் தெரிவித்தார்.

இந்த நிலையில் கமல் சந்திப்பு குறித்து ராகுல்காந்தி தனது டுவிட்டரில், 'கமல்ஹாசன் உடனான சந்திப்பு மகிழ்ச்சிகரமாக இருந்தது. காங்கிரஸ் மற்றும் மக்கள் நீதி மய்யம் கட்சிகள் குறித்து ஆலோசனை செய்தோம். தமிழகத்தில் நிலவும் அரசியல் சூழ்நிலைகள் குறித்தும் கமல்ஹாசனிடம் பேசினேன்' என்று கூறியுள்ளார்.

இருவருமே மரியாதை நிமித்த சந்திப்பு என்று கூறினாலும் வரும் பாராளுமன்ற தேர்தலில் இரு கட்சிகளும் கூட்டணி அமைத்து போட்டியிட வாய்ப்பு உள்ளதாக கூறப்படுகிறது. அதேபோல் கமல்ஹாசனை ஒருசிலர் பாஜகவின் ஸ்லீப்பர்செல் என்று கூறியதற்கு இந்த சந்திப்பு ஒரு முற்றுப்புள்ளியாக அமைந்துள்ளது என்பதும் குறிப்பிடத்தக்கது.

More News

விஜய்யை திடீரென சந்தித்த சிவகார்த்திகேயன்

தளபதி விஜய் நடித்து வரும் 'தளபதி 62' திரைப்படத்தின் படப்பிடிப்பு சென்னை பின்னி மில்லில் நேற்று நடைபெற்றது. அதேபோல் நேற்றுடன் சிவகார்த்திகேயன் நடித்த 'சீமராஜா'

சாக்கடையை பற்றி பேச வேண்டாம்: பாலாஜி குறிப்பிட்டது யாரை?

பிக்பாஸ் நிகழ்ச்சியில் பாலாஜியும் அவருடைய மனைவி நித்யாவும் போட்டியாளர்களாக அறிவிக்கப்படதில் இருந்தே பிக்பாஸ் வீட்டில் பிரச்சனை வரப்போகிறது என்பதை பார்வையாளர்கள் ஊகித்துவிட்டனர்.

கமல்-ராகுல்காந்தி சந்திப்பு: அதிர்ச்சியில் தமிழக காங்கிரஸ்

நடிகர் கமல்ஹாசன் தேர்தல் கமிஷன் அலுவலகத்திற்கு செல்வதற்காக இன்று டெல்லி சென்றிருந்தார் என்பது தெரிந்ததே. அவருடைய பயண திட்டத்தில் டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் அவர்களை மரியாதை நிமித்தமாக

சின்னத்திரை நடிகை நிலானி திடீர் கைது! 

ஸ்டெர்லைட் ஆலையை நிரந்தரமாக மூட வேண்டும் என்று தூத்துகுடி மக்கள் பல நாட்களாக போராடி வந்தனர். இந்த போராட்டத்தின் 100வது நாளில் திடீரென வன்முறை வெடித்ததால் துப்பாக்கி சூடு

அஞ்சலி பிறந்த நாளை மறந்த ஜெய்! என்ன ஆச்சு பலவருட காதல்?

'எங்கேயும் எப்போதும்' படத்தில் நடித்தபோது ஜெய் மீது அஞ்சலிக்கு காதல் ஏற்பட்டதாகவும், அதன் பின்னர் இருவரும் காதல் பறவைகளாக சுற்றி வந்ததும் அறிந்ததே