மணிரத்னம் உதவியாளராக பணிபுரியும் பிரபல நடிகரின் மகள்.. எதிர்கால கனவு என்ன தெரியுமா?

  • IndiaGlitz, [Saturday,July 06 2024]

பிரபல நடிகரின் மகள் மணிரத்னம் அவர்களிடம் உதவி இயக்குனராக பணி செய்து கொண்டிருப்பதாகவும் தற்போது உருவாகி வரும் ’தக்லைஃப்’ படத்தில் கூட அவர் உதவி இயக்குனராக இருப்பதாகவும் கூறப்படுகிறது.

கடந்த 1986 ஆம் ஆண்டு ’நிலவே மலரே’ என்ற திரைப்படத்தின் மூலம் தமிழ் திரை உலகில் அறிமுகமானவர் நடிகர் ரகுமான். அதன் பின் ’வசந்த ராகம்’ ’புரியாத புதிர்’ ’புது புது அர்த்தங்கள்’ உள்ளிட்ட பல படங்களில் நாயகனாக நடித்த அவர் அஜித்தின் ’பில்லா’ சூர்யாவின் ’சிங்கம்’ உட்பட சில படங்களில் வில்லனாகவும் நடித்தார்.

சமீபத்தில் வெளியான ’பொன்னியின் செல்வன்’ இரண்டு பாகங்களிலும் மதுராந்தகன் கேரக்டரில் நடித்திருந்த ரகுமான், தற்போது ’அஞ்சாமை’ என்ற படத்தில் நடித்து வருகிறார். தமிழ் மட்டுமின்றி மலையாளம், தெலுங்கு ,ஹிந்தி படத்திலும் அவர் நடித்துள்ளார்.

இந்த நிலையில் ரகுமான் மகள்களில் ஒருவரான அலிஷா சிறுவயதிலிருந்து சினிமாவில் ஆர்வம் கொண்டவராக இருந்த நிலையில் தற்போது மணிரத்னம் அவர்களிடம் உதவி இயக்குனராக இருப்பதாகவும் அவர் ’தக்லைஃப்’ படத்திலும் பணிபுரிந்து வருவதாகவும் தெரிகிறது. இந்த நிலையில் ’தக்லைஃப்’ படத்தின் படப்பிடிப்பு முடிந்த பிறகு எதிர்காலத்தில் நடிகையாக அல்லது இயக்குனராக தனது பயணத்தை தொடங்குவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

More News

ஆதரவாக சின்மயி கணவர்.. எதிர்ப்பாக விஷ்ணு விஷால் மனைவி.. என்ன நடக்குது சமந்தா விஷயத்தில்?

நடிகை சமந்தா கடந்த சில நாட்களுக்கு முன் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் கூறிய மருத்துவ குறிப்பு பெரும் சர்ச்சையை ஏற்படுத்திய நிலையில் இதற்கு ஒரு மருத்துவர் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார்

புயலுக்கு பின் அமைதி.. திருமணம் முடிந்த கையோடு ஹனிமூன்.. கணவருடன் வரலட்சுமி புகைப்படம் வைரல்..!

நடிகை வரலட்சுமிக்கு சமீபத்தில் திருமணம் நடந்த நிலையில் திருமணம் முடிந்த கையோடு அவர் ஹனிமூன் சென்ற புகைப்படத்தை தனது இன்ஸ்டாகிராமில் பதிவு செய்துள்ள நிலையில்

ஸ்ருதிஹாசன் மட்டுமல்ல.. 'கூலி' படத்தில் இணைந்த 'பிகில்' நடிகை.. வைரல் புகைப்படம்..!

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடித்து வரும் 'கூலி' படத்தின் படப்பிடிப்பு ஹைதராபாத்தில் நடைபெற்று வரும் நிலையில் இந்த படத்தின் முதல் நாள் படப்பிடிப்பில் கலந்து கொண்டதாக நேற்று ஸ்ருதிஹாசன்

பகுஜன் சமாஜ் கட்சி தலைவர் ஆம்ஸ்ட்ராங் படுகொலை.. கமல்ஹாசன், சரத்குமார் கண்டனம்..!

பகுஜன் சமாஜ் கட்சியின் தலைவர் நேற்று இரவு படுகொலை செய்யப்பட்ட நிலையில் இந்த படுகொலைக்கு தமிழக அரசியல்வாதிகள் மற்றும் திரையுலகினர் கண்டனம் தெரிவித்து வருகின்றனர்.

நான் ஜெயிலுக்கு போகணுமா ? நடிகை சமந்தா வேதனை.

என் உடல் பிரச்சினையை சரி செய்து கொள்ள சிகிச்சைக்காக பல கோடி ருபாய் செலவு செய்து இருக்கிறேன்.அந்த பாதிப்பில் இருந்து நான் மீண்டு வந்து உள்ளேன்..