கருவில் சுமந்த தாய்க்கு கருவறையில் சிலை. ராகவா லாரன்ஸ்

  • IndiaGlitz, [Sunday,May 08 2016]
பிரபல நடிகர், இயக்குனர், நடன இயக்குனர் ராகவா லாரன்ஸ் தீவிர ராகவேந்திரர் பக்தர் என்பது அனைவரும் அறிந்ததே. இவர் சென்னை அருகே ஸ்ரீராகவேந்தரருக்கு கோயில் கட்டியுள்ளார். மேலும் அந்த கோவிலின் அருகிலேயே தனது தாயார் கண்மணி அவர்களுக்கும் கோவில் கட்டி வருகிறார். இந்த கோவிலின் பணிகள் நிறைவடையும் நிலையில் உள்ளது. இந்த கோவிலில் வைப்பதற்காக அவரது தாய் கண்மணியின் பளிங்கு சிலை ராஜஸ்தானில் தயாராகி வருகிறது. உலகம் முழுவதும் இன்று மே-8ஆம் தேதி அன்னையர் தினம் அனுசரிக்கப்பட்டு வரும் நிலையில் தனது தாயார் குறித்தும் அவருக்கு கோவில் கட்டுவது குறித்தும் ராகவா லாரன்ஸ் கூறியதாவது:
இந்த கோயில் இன்னும் இரண்டு மாதங்களில் திறக்கப்பட உள்ளது. கட்டப்பட்டுக் கொண்டிருக்கும் அந்த கோவிலின் புகைப்படத்தையும் ராஜஸ்தானில் வடிவமைக்கப்பட்டுக் கொண்டிருக்கும் எனது தாயாரின் சிலையின் புகைப்படத்தையும் இன்று அன்னையர் தினத்தில் வெளியிடுவதில் மகிழ்ச்சியடைகிறேன்.

உலகிலேயே உயரிய மந்திரமாக கருதப்படுவது காயத்திரி மந்திரம் அதனால் அந்த கோவில் கருவறையில் காயத்திரி தேவிக்கு திரு உருவ சிலை ஒன்றும் நிர்மாணிக்கப்பட்டுக் கொண்டிருக்கிறது. அந்த சிலைக்கு கீழே எனது தாய் கண்மணி தியானம் செய்வது போன்ற சிலை ஒன்று வைக்கிறேன். தெய்வத்துக்கு நிகரானவர் தாய்மட்டுமே அதனால் ஒரே கருவறையில் தெய்வத்தையும், தாயையும் சிலையாக வைக்கிறேன்.
என்னை கருவில் சுமந்து காப்பாற்றிய எனது தாய்க்கு கருவறையில் சிலை வைத்து பெருமை படுத்த வேண்டும் என்பதை எனது லட்சியமாக கொண்டிருந்தேன். தாயின் பெருமையை, அருமையை உலகத்திற்கு சொல்லவே நான் இந்த கோவிலை கட்டிக்கொண்டிருக்கிறேன்.
உலகிலேயே தாய்க்கு கோவில் அதுவும் தமிழ்நாட்டில், என்பதில் நான் பெருமைகொள்கிறேன். தமிழ்நாட்டிலேயே பிறந்து தமிழ்நாட்டிலேயே வளர்ந்து.. சிரமப்பட்டு எங்களை வளர்த்து ஆளாக்கிய அந்த தாய்க்கு இதே தமிழ்நாட்டில் கோவில் கட்டுவதுதானே நியாயம்.
இன்று என்னோட அம்மா நடைப்பயிற்சி செய்துகொண்டு இருந்தார்கள் அப்போது செல்போனில் இருந்த அவரது சிலையின் புகைப்படத்தை காட்டும்போது அவர் மிகவும் சந்தோஷப்பட்டார் மற்றும் எனது சகோதர் எல்வின்னும் அனைவரும் பார்த்து மகிழ்ந்தார்கள்..
இவ்வாறு ராகவா லாரன்ஸ் கூறியுள்ளார்.

More News

தப்பிப் பிழைத்தது பாபிசிம்ஹா படம்

ஜிகர்தண்டா' படத்தின் மூலம் தேசிய விருது பெற்ற பாபிசிம்ஹா தற்போது கோலிவுட்டின் முன்னணி நடிகர்களில் ஒருவராக உருவாகி வருகிறார்...

ஜெயம் ரவிக்காக குதிரை சவாரி செய்யும் ராம்சரண் தேஜா

கடந்த ஆண்டு வெளியான சூப்பர் ஹிட் படங்களில் ஒன்று 'ஜெயம்' சகோதரர்களின் 'தனி ஒருவன்' என்பது அனைவரும் அறிந்ததே....

'விஜய் 60' திருநெல்வேலி பின்னணியை கொண்ட படமா? புதிய தகவல்

இளையதளபதி விஜய் நடித்த 'தெறி' படத்தின் வசூல் தெறிக்க வைத்தது என்பது உலகமே அறிந்ததுதான்....

ரஜினியின் '2.0' படத்துடன் கனெக்ஷன் ஆன ஜி.வி.பிரகாஷ்

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடித்த 'பாட்ஷா' படத்தில் இடம்பெற்ற புகழ்பெற்ற வசனமான 'எனக்கு இன்னொரு பேர் இருக்கு' என்ற டைட்டிலில் ஜி.வி.பிரகாஷ் ஒரு படத்தில் நடித்து வருகிறார் என்பது அனைவரும் அறிந்ததே. இந்நிலையில் இந்த படத்தின் பாடல்களை ரஜினி ...

விஷாலுக்கு நன்றி தெரிவித்த டிசம்பர் 3 இயக்கத்தினர்

பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி டிசம்பர் 3 இயக்கத்தினர்களுடன் இணைந்து சமீபத்தில் மாற்றுத்திறனாளிகள் போராட்டம் நடத்தினர்...