மருத்துவமனையில் இருந்து மீண்டும் போராட்டக்களத்திற்கு திரும்பிய ராகவா லாரன்ஸ். சல்யூட்

  • IndiaGlitz, [Saturday,January 21 2017]

சென்னை மெரீனாவில் கடந்த ஐந்து நாட்களாக இரவு பகல் பாராது, கடுங்குளிரையும் பொருட்படுத்தாது தன்னலமின்றி ஜல்லிக்கட்டு என்ற தமிழினத்தின் அடையாளத்திற்காக லட்சக்கணக்கான இளைஞர்கள் போராடி வருகின்றனர். இந்த போராட்டத்திற்கு கோலிவுட் திரையுலகினர்களின் முழு ஆதரவு இருந்தபோதிலும் ராகவா லாரன்ஸ் போன்ற ஒருசில நடிகர் களத்தில் இறங்கி இளைஞர்களை ஊக்குவித்து வருவதோடு, போராட்டக்காரர்களுக்கு தேவையான வசதியையும் செய்து தருகின்றனர்.

இந்நிலையில் நேற்று நடிகர் ராகவா லாரன்சுக்கு திடீரென உடல்நலக்குறைவு ஏற்பட்டதால் சிகிச்சைக்காக அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அவருக்கு மருத்துவர்கள் முதல்கட்ட சிகிச்சை அளித்து பூரண ஓய்வு எடுக்க அறிவுறுத்தினர்.

ஆனால் தமிழ் உணர்வும், போராடும் இளைஞர்களுக்கு உதவும் எண்ணவும் கொண்ட ராகவா லாரன்ஸ் ஓய்வு எடுக்காமல் மீண்டும் மெரீனாவின் போராட்டக்களத்திற்கு வந்துள்ளார். உடல்நலத்தையும் பொருட்படுத்தாமல் போராட்ட களத்தில் மீண்டும் இணைந்துள்ள ராகவா லாரன்சுக்கு இளைஞர்களின் சார்பில் ஒரு சல்யூட்.....