'ஜிகர்தண்டா' முதல் பாகத்தை மிஸ் செய்துவிட்டேன்: ராகவா லாரன்ஸ்.

  • IndiaGlitz, [Tuesday,September 12 2023]

ராகவா லாரன்ஸ் மற்றும் எஸ்ஜே. சூர்யா நடிப்பில், கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில், சந்தோஷ் நாராயணன் இசையில் உருவான ’ஜிகர்தண்டா’ படத்தின் இரண்டாம் பாகத்தின் டீசர் நேற்று வெளியானது என்பதும், இந்த டீசர் மிகப்பெரிய அளவில் இணையத்தில் வைரல் ஆகி வருகிறது என்பதும் தெரிந்ததே.

இந்த நிலையில் சமீபத்தில் பேட்டி அளித்த ராகவா லாரன்ஸ் ’ஜிகர்தண்டா முதல் பாகத்தில் நான் நடிக்க வேண்டியது, ஆனால் ஒரு சில கமிட்மெண்ட் காரணமாக அந்த படத்தை நான் செய்துவிட்டேன். அதன் பிறகு தான் நான் நடிக்க இருந்த கேரக்டரில் பாபி சிம்ஹா நடித்தார் என்று தெரிவித்துள்ளார்.

ஆனால் அதே நேரத்தில் இரண்டாம் பாகத்தில் நடிக்க கார்த்திக் சுப்புராஜிடம் இருந்து அழைப்பு வந்த போது நான் அதை மிஸ் செய்யவில்லை என்றும் இந்த படத்தில் எனது கேரக்டர் சிறப்பாக வந்துள்ளது என்றும் தெரிவித்தார். ஜிகர்தண்டா இரண்டாம் பாகம் சூப்பராக வந்துள்ளது என்றும் இந்த படம் அனைவரும் ரசிக்கும் வகையில் இருக்கும் என்றும் அவர் தெரிவித்தார்.

ஏற்கனவே பாபி சிம்ஹா நடித்த கேரக்டரை தன்னிடம் கூறியிருந்தால் நானே நடித்திருப்பேன் என சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் தெரிவித்து இருந்ததாகவும் தகவல் உண்டு.