நண்பன் விஜய்க்கு என் மனமார்ந்த வாழ்த்துக்கள்.. காலில் விழுந்து வணங்கிய ராகவா லாரன்ஸ்..!

  • IndiaGlitz, [Saturday,April 13 2024]

நடிகர் விஜய் சென்னையில் சாய்பாபா கோயிலை கட்டிய நிலையில் அந்த கோயிலுக்கு வருகை தந்த நடிகர் மற்றும் இயக்குனர் ராகவா லாரன்ஸ் நண்பர் விஜய்க்கு எனது மனமார்ந்த வாழ்த்துக்கள் என்று கூறியதோடு அவரது தாயார் ஷோபா சந்திரசேகர் காலில் விழுந்து ஆசி பெற்றார். இது குறித்த வீடியோ இணையத்தில் வைரல் ஆகி வருகிறது.

நடிகர் விஜய்யின் அம்மா ஷோபா சந்திரசேகர் ஒரு சாய்பாபா பக்தர் என்பதை அடுத்து அம்மாவுக்காக சாய்பாபா கோயிலை சென்னை கொரட்டூர் பகுதியில் நடிகர் விஜய் கட்டிக் கொண்டிருப்பதாக தகவல் வெளியானது.

இந்த கோவிலின் கும்பாபிஷேகம் சமீபத்தில் நடந்த நிலையில் இதில் ஷோபா சந்திரசேகர் உள்பட ஏராளமானோர் கலந்து கொண்டனர். இந்த நிலையில் இன்று நடிகர் மற்றும் இயக்குனர் ராகவா லாரன்ஸ் இந்த கோயிலுக்கு வருகை தந்து சாய்பாபாவை தரிசனம் செய்தார். அதன் பின் விஜய்யின் தாயார் ஷோபா காலில் விழுந்து ஆசி பெற்ற நிலையில் இது குறித்த வீடியோவை தனது சமூக வலைதளத்தில் பதிவு செய்துள்ளார். இந்த வீடியோவில் அவர் கூறியிருப்பதாவது:

அனைவருக்கும் வணக்கம், இன்று எனது நண்பர் விஜய் கட்டிய சாய்பாபா கோவிலுக்கு அவரது தாயாருடன் சென்றேன். நான் ராகவேந்திரா சுவாமியை கோவிலை கட்டிய போது அந்த கோவிலுக்கு வந்த ஒரு பாடலை பாடியவர் தான் ஷோபா அவர்கள். இன்று நான் அவருடைய கோவிலுக்கு செல்வதில் மகிழ்ச்சி அடைகிறேன். நண்பர் விஜய்க்கு என் மனமார்ந்த வாழ்த்துக்கள்.

தூய்மையான, தெய்வீகமான, இனிமையான அதிர்வுகளை இந்த கோயிலுக்குள் நான் சென்றபோது உணர்ந்தேன். அனைவரும் கோவிலுக்கு சென்று அருள் பெறுமாறு பரிந்துரை செய்கிறேன் என்று ராகவா லாரன்ஸ் அந்த பதிவில் தெரிவித்துள்ளார்.

More News

நடிகர் சாயாஷி ஷிண்டேவுக்கு என்ன ஆச்சு? மருத்துவமனையில் அனுமதி..!

பிரபல நான் குணச்சித்திர நடிகர் சாயாஜி ஷிண்டே மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு உள்ளதாகவும் அவருக்கு இதயத்தில் அடைப்பு இருப்பதாகவும் கூறப்படுவது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

'பாண்டியன் ஸ்டோர்ஸ் 2' சீரியல் நடிகை திடீர் விலகல்.. இவருக்கு பதில் இவர் யார் தெரியுமா?

தொலைக்காட்சி சீரியல்களில் நடித்துக் கொண்டிருக்கும் நடிகர் நடிகைகள் திடீரென விலகுவதும் இதனை அடுத்து அந்த சீரியலில் இவருக்கு பதில் இவர் என்று ஒரே ஒரு டைட்டில் கார்டு

துல்கர், ஜெயம்ரவியை அடுத்து இன்னொரு பிரபல நடிகரும் விலகலா? என்ன நடக்குது 'தக்லைஃப்' படத்தில்?

உலக நாயகன் கமல்ஹாசன் நடிப்பில், மணிரத்னம் இயக்கத்தில் உருவாகி வரும் 'தக்லைஃப்' படத்தில் ஏற்கனவே துல்கர் சல்மான் மற்றும் ஜெயம் ரவி விலகி விட்டதாக தகவல் வெளியான நிலையில் தற்போது இன்னொரு

தனுஷை மகன் என கோரிய மதுரை தம்பதி வீட்டில் நிகழ்ந்த சோகம்.. என்ன நடந்தது?

நடிகர் தனுஷை தனது மகன் என்று மதுரையை சேர்ந்த கதிரேசன் - மீனாட்சி தம்பதி நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்த நிலையில் இந்த தம்பதி வீட்டில் நிகழ்ந்த சோகம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

பாலாவின் 'வணங்கான்' படம் குறித்த சூப்பர் அப்டேட்.. அருண் விஜய்யின் நெகிழ்ச்சியான பதிவு..!

பிரபல இயக்குனர் பாலா இயக்கத்தில், அருண் விஜய் நடிப்பில் உருவாகி வந்த 'வணங்கான்' படத்தின் படப்பிடிப்பு கடந்த சில மாதங்களாக நடைபெற்று வந்த நிலையில் தற்போது இந்த படம் குறித்த சூப்பர் அப்டேட்