நண்பன் விஜய்க்கு என் மனமார்ந்த வாழ்த்துக்கள்.. காலில் விழுந்து வணங்கிய ராகவா லாரன்ஸ்..!

  • IndiaGlitz, [Saturday,April 13 2024]

நடிகர் விஜய் சென்னையில் சாய்பாபா கோயிலை கட்டிய நிலையில் அந்த கோயிலுக்கு வருகை தந்த நடிகர் மற்றும் இயக்குனர் ராகவா லாரன்ஸ் நண்பர் விஜய்க்கு எனது மனமார்ந்த வாழ்த்துக்கள் என்று கூறியதோடு அவரது தாயார் ஷோபா சந்திரசேகர் காலில் விழுந்து ஆசி பெற்றார். இது குறித்த வீடியோ இணையத்தில் வைரல் ஆகி வருகிறது.

நடிகர் விஜய்யின் அம்மா ஷோபா சந்திரசேகர் ஒரு சாய்பாபா பக்தர் என்பதை அடுத்து அம்மாவுக்காக சாய்பாபா கோயிலை சென்னை கொரட்டூர் பகுதியில் நடிகர் விஜய் கட்டிக் கொண்டிருப்பதாக தகவல் வெளியானது.

இந்த கோவிலின் கும்பாபிஷேகம் சமீபத்தில் நடந்த நிலையில் இதில் ஷோபா சந்திரசேகர் உள்பட ஏராளமானோர் கலந்து கொண்டனர். இந்த நிலையில் இன்று நடிகர் மற்றும் இயக்குனர் ராகவா லாரன்ஸ் இந்த கோயிலுக்கு வருகை தந்து சாய்பாபாவை தரிசனம் செய்தார். அதன் பின் விஜய்யின் தாயார் ஷோபா காலில் விழுந்து ஆசி பெற்ற நிலையில் இது குறித்த வீடியோவை தனது சமூக வலைதளத்தில் பதிவு செய்துள்ளார். இந்த வீடியோவில் அவர் கூறியிருப்பதாவது:

அனைவருக்கும் வணக்கம், இன்று எனது நண்பர் விஜய் கட்டிய சாய்பாபா கோவிலுக்கு அவரது தாயாருடன் சென்றேன். நான் ராகவேந்திரா சுவாமியை கோவிலை கட்டிய போது அந்த கோவிலுக்கு வந்த ஒரு பாடலை பாடியவர் தான் ஷோபா அவர்கள். இன்று நான் அவருடைய கோவிலுக்கு செல்வதில் மகிழ்ச்சி அடைகிறேன். நண்பர் விஜய்க்கு என் மனமார்ந்த வாழ்த்துக்கள்.

தூய்மையான, தெய்வீகமான, இனிமையான அதிர்வுகளை இந்த கோயிலுக்குள் நான் சென்றபோது உணர்ந்தேன். அனைவரும் கோவிலுக்கு சென்று அருள் பெறுமாறு பரிந்துரை செய்கிறேன் என்று ராகவா லாரன்ஸ் அந்த பதிவில் தெரிவித்துள்ளார்.