தமிழ் நடிகரின் கண்ணீர் வீடியோவை அஜித்திடம் சேர்த்த ராகவா லாரன்ஸ்

கொரோனா வைரஸ் தாக்கம் காரணமாக தமிழகத்தில் கோலிவுட் திரையுலகில் நலிந்த நடிகர்கள் பலர் சாப்பாட்டுக்கே வழியில்லாமல் கஷ்டப்பட்டு கொண்டிருக்கின்றனர். பெப்சி அமைப்புக்கு உதவிய அளவுக்கு நடிகர் சங்க நலிந்த நடிகர்களுக்கு உதவிகள் வரவில்லை என்பதால் இன்னும் பல நடிகர்கள் பெரும் சிக்கலில் உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில் நடிகர் தீப்பெட்டி கணேசன் வீடியோ ஒன்றை வெளியிட்டு அதில் அஜித் தனக்கு உதவி செய்வார் என்ற நம்பிக்கை இருப்பதாகவும் இந்த செய்தியை தயவுசெய்து அவரிடம் சேர்த்து விடுங்கள் என்று கண்ணீருடன் ஒரு வீடியோவை வெளியிட்டுள்ளார்.

இதுகுறித்து அவர் மேலும் கூறியதாவது: படப்பிடிப்பு தளத்தில் என்னுடைய ஒரிஜினல் பெயரான கார்த்திக் என்ற பெயரை இதுவரை யாரும் கூறியதில்லை. ஆனால் அஜித் மட்டுமே என்னை கார்த்தி என்று கூப்பிட்ட கடவுள். நான் எப்போது வறுமையால் வாடி வருகிறேன். அஜித் அவர்களிடம் உதவி கேட்பதற்காக நான் பலமுறை முயற்சி செய்தேன். ஆனால் இதுவரை என்னால் முடியவில்லை. எனக்கு என்ன ஆனாலும் பரவாயில்லை, ஆனால் எனது குழந்தைகளுக்கு ஏதாவது உதவி கிடைக்க வேண்டும். இந்த செய்தி தெரிந்தால் நிச்சயம் அஜித் அவர்கள் எனக்கு உதவி செய்வார். எனவே தயவு செய்து அவரிடம் இந்த செய்தியை யாராவது கொண்டு போய் சேர்த்து விடுங்கள். ரசிகர்கள், மீடியாவை சேர்ந்தவர்கள் யாராவது அஜித்திடம் இதனை தெரிவித்தால் உடனே அவர் என்னை அழைத்து உதவி செய்வார். எனவே தயவு செய்து யாராவது இதை கொண்டு சேர்த்து விடுங்கள் என்று கண்ணீருடன் தீப்பெட்டி கணேசன் கூறிய வீடியோ தற்போது இணையதளங்களில் வைரலாக என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில் நடிகர் ராகவா லாரன்ஸ் தனது சமூக வலைத்தளத்தில், ‘நண்பா இந்த வீடியோவை அஜித்தின் மேனேஜரிடம் சேர்த்துவிட்டேன். விரைவில் அஜித் உங்களை தொடர்பு கொண்டு உங்களுக்கு உதவி செய்வார். உங்கள் குழந்தைகள் கல்விக்கு என்னால் முடிந்த உதவிகளை செய்கிறேன். உங்கள் விபரங்களை அனுப்பவும் என்று தெரிவித்துள்ளார்.

More News

விஜயகாந்த் தான் உண்மையான சூப்பர் ஸ்டார்: பிரபல ஹீரோ பாராட்டு

நேற்று சென்னையில் கொரோனாவால் பலியான மருத்துவர் ஒருவரின் உடலை அடக்கம் செய்ய எதிர்ப்பு தெரிவித்து சிலர் போராட்டம் நடத்தியதும் அதன் பின்னர் போலீசார் தலையிட்டு போராட்டம் நடத்திய 20 பேரை கைது

கொரோனா நேரத்தை பயன்படுத்திக்கொள்ள நினைத்த சீனா!!! தக்கப் பதிலடி கொடுத்த இந்தியா!!!

கொரோனா கோரத் தாண்டவத்தில் இருந்து தற்போது சீனா மீண்டு வந்திருக்கிறது.

கொரோனா பரவல்: தொடரும் குற்றச்சாட்டுகளுக்கு சீனாவின்  வுஹான் ஆய்வகம் விளக்கம்!!!

கொரோனா பரவலைத் தொடர்ந்து உலகம் முழுவதும் பல்வேறு விமர்சனங்கள் மற்றும் வதந்திகள் பரப்பப்பட்டன.

அலட்சியத்தால், கொரோனா நோயாளியை அவசரச் சிகிச்சைப் பிரிவில் அனுமதித்த மருத்துவர்!!!

அலிகார் முஸ்லீம் பல்கழைக்கழகத்துடன் இணைக்கப்பட்ட AMU ஜவஹர்லால் நேரு மருத்துவக் கல்லூரியின் மருத்துவமனையில் நடைபெற்ற ஒரு சம்பவம் தற்போது பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது.

ஷாருக்கான் கேரக்டரில் நடிக்க விரும்பும் தளபதி விஜய்!

தளபதி விஜய் தான் நடித்து வரும் பெரும்பாலான படங்களில் நெகட்டிவ் கேரக்டர்களை தவிர்த்துவிடுவார் என்பதும், அவர் மாஸ் ஹீரோ கேரக்டர்களையே விரும்பி நடிப்பார் என்பதும் தெரிந்ததே