close
Choose your channels

காலம் எல்லாவற்றிற்கும் பதிலளிக்கும்: முருகன் விவகாரம் குறித்து ராகவா லாரன்ஸ்

Thursday, July 16, 2020 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

கறுப்பர் கூட்டம் என்ற யூடியூப் சேனலில் கடந்த சில நாட்களுக்கு முன் கந்தகஷ்டி கவசம் குறித்து அருவருப்பான விமர்சன வீடியோ வெளியானதில் இருந்து முருகபக்தர்கள் உச்சகட்ட கோபத்தில் உள்ளனர். இந்து மத ஆதரவாளர்கள் மட்டுமின்றி பிற மதத்தை சேர்ந்தவர்களும் இந்த சேனலுக்கு தங்களது கண்டனத்தை வருகின்றனர்.

ஏற்கனவே இந்த விவகாரம் குறித்து பல திரையுலக பிரமுகர்கள் தங்களது கண்டனங்களை தெரிவித்துள்ள நிலையில் நடிகரும் இயக்குனருமான ராகவா லாரன்ஸ் இதுகுறித்து தனது சமூக வலைத்தளத்தில் கூறியதாவது:

அனைத்து முருக பக்தர்களுக்கும் வணக்கம். இன்று கிருத்திகை, எனவே நான் உங்கள் அனைவருடனும் ஒருகருத்தை பகிர்ந்து கொள்ள விரும்புகிறேன். தினமும் கந்த சஷ்டி கவசத்தை கேட்டு வளர்ந்தவன் நான். என் அம்மா அதை தினமும் என்னிடம் காலையில் படித்து காட்டுவார். அதன் சக்தியை நான் அறிந்து உணர்ந்துள்ளேன். கந்தசஷ்டி கவசம் என்னை பாதுகாத்த ஒரு கேடயம் என்பதை நான் நம்புகிறேன்.

எங்கள் வீட்டில் உள்ள முருகன் சிலையை நான் தினமும் வணங்குவேன். நான் இன்று எதற்காக சொல்கிறேன் என்பதற்கு ஒரு காரணம் இருக்கிறது. நீங்கள் அனைவரும் ஏற்கனவே அதை அறிந்திருப்பீர்கள் என நம்புகிறேன். இதைப் பற்றி அதிகமாக பேசி யாரையும் பெரிய ஆளாக மாற்ற வேண்டாம். முருகனின் அழகு, அன்பு மற்றும் சக்தியை பாருங்கள். அதற்கு முன் எல்லாமே ஒன்றுமே இல்லை. காலம் எல்லாவற்றிற்கும் பதிலளிக்கும்.

இவ்வாறு ராகவா லாரன்ஸ் தெரிவித்துள்ளார்.
 

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.   

Comments

Welcome to IndiaGlitz comments! Please keep conversations courteous and relevant to the topic. To ensure productive and respectful discussions, you may see comments from our Community Managers, marked with an "IndiaGlitz Staff" label. For more details, refer to our community guidelines.
settings
Login to post comment
Cancel
Comment