கங்கனா ஒரிஜினல் சந்திரமுகி.. ஆனால் ஜோதிகா அப்படியில்லை.. ராகவா லாரன்ஸ்..!

  • IndiaGlitz, [Wednesday,September 06 2023]

’சந்திரமுகி 2’ படத்தில் கங்கனா ஒரிஜினல் சந்திரமுகி கேரக்டரில் நடித்துள்ளார் என்றும் ஆனால் சந்திரமுகி முதல் பாகத்தில் ஜோதிகா சந்திரமுகியாக தன்னை நினைத்துக் கொண்டு நடித்திருந்தார் என்று ராகவா லாரன்ஸ் விளக்கம் அளித்துள்ளார்.

ராகவா லாரன்ஸ் நடிப்பில் பி வாசு இயக்கத்தில், எம்.எம்.கீரவாணி இசையில் உருவாகியுள்ள ’சந்திரமுகி 2’ திரைப்படம் வரும் 15ஆம் தேதி வெளியாக உள்ளது. இந்த படத்தின் இசை வெளியீட்டு விழா சமீபத்தில் பிரமாண்டமாக நடந்தது என்பதும் குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில் ’சந்திரமுகி 2’ படத்தின் செய்தியாளர் சந்திப்பில் ’ஜோதிகா மற்றும் கங்கனா சந்திரமுகி கேரக்டர்களில் நடித்தது குறித்து ராகவா லாரன்ஸ் விளக்கம் அளித்தார். அதில், ‘எல்லோரும் ஜோதிகா மேடம் மாதிரியே கங்கனா நடித்துள்ளார் என்று கேட்கிறார்கள். ஆனால் ஜோதிகாவையும், கங்கனாவையும் ஒப்பிடக்கூடாது. ஏனெனில் ஜோதிகா மேடம் தன்னை சந்திரமுகியாக நினைத்து நடித்துள்ளார், ஆனால் கங்கனா ஒரிஜினல் சந்திரமுகி கேரக்டரில் நடித்துள்ளார் என்று தெரிவித்தார்

தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம் மற்றும் ஹிந்தி ஆகிய ஐந்து மொழிகளில் உருவாகியுள்ள இந்த படத்தில் ராகவா லாரன்ஸ், கங்கனா, வடிவேலு, ராதிகா, லட்சுமி மேனன், ஸ்ருஷ்டி, மஹிமா நம்பியார், ரவி மரியா, சுரேஷ் மேனன், ஆர்.எஸ்.சிவாஜி, ஒய்ஜி மகேந்திரா, மனோபாலா உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். இதில் மனோபாலா மற்றும் ஆர்.எஸ்.சிவாஜி தற்போது உயிருடன் இல்லை என்பது குறிப்பிடத்தக்கது.

லைகா நிறுவனத்தின் பிரம்மாண்டமான தயாரிப்பில், ஆர் ஜி ராஜசேகர் ஒளிப்பதிவில், தோட்டா தரணி கலை இயக்கத்தில் இந்த படம் உருவாகியுள்ளது.

More News

இந்தியாவை பாரத் என அழைக்க வேண்டும் என 3 வருடங்களுக்கு முன்பே சொன்னேன்: 'சந்திரமுகி 2' நடிகை..!

இந்தியாவை பாரத் என அழைக்க வேண்டும் என மூன்று வருடங்களுக்கு முன்பே நான் கூறியிருக்கிறேன் என்று 'சந்திரமுகி 2' படத்தில் நடித்த பிரபல நடிகை ஒருவர் கூறியிருக்கிறார்.

எதிர்காலத்தை நிகழ்காலத்திலேயே காண்பேன் என்று நினைக்கவில்லை: 'பாரத்' குறித்து கபிலன் வைரமுத்து

இந்தியா என்ற நம் நாட்டின் பெயரை பாரத் என மாற்ற மத்திய அரசு திட்டமிட்டு வருவதாக கூறப்படும் நிலையில் இது குறித்து தனது கருத்தை கபிலன் வைரமுத்து தனது சமூக வலைத்தளத்தில் தெரிவித்துள்ளார்.  

மீண்டும் தள்ளிப்போகிறதா சிவகார்த்திகேயனின் 'அயலான்'? 2 பெரிய படங்களுடன் மோதுகிறதா?

சிவகார்த்திகேயன் நடிப்பில்,  ரவிக்குமார் இயக்கத்தில் உருவான 'அயலான்' என்ற திரைப்படம் வரும் தீபாவளி அன்று வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டிருந்த நிலையில் தற்போது மேலும் தள்ளிப்போக வாய்ப்பு இருப்பதாக

சனாதனத்தை ஒழிக்க வேண்டும் என்ற உதயநிதிக்கே எனது ஆதரவு: ரஜினி பட இயக்குனர் அறிவிப்பு..!

கடந்த சில நாட்களுக்கு முன்னர் சனாதன ஒழிப்பு மாநாட்டில் கலந்து கொண்ட அமைச்சர் உதயநிதி ஸ்டாலின், சனாதனத்தை ஒழிக்க வேண்டும் என பேசியது பெரும் சர்ச்சைக்கு உள்ளானது. உதயநிதிக்கு

தந்தையை இழந்த இளம் பாடகி.. சூப்பர் சிங்கர் ஜூனியரில், நிகழ்ந்த நெகிழ்ச்சி சம்பவம் !!  

இசையுலகில் மிக முக்கிய நிகழ்ச்சியாக கொண்டாடப்படும் ஜூனியர் சூப்பர் சிங்கர் 9 வது சீசன் கோலாகலமாக நடந்து வருகிறது. பல ஆச்சர்ய தருணங்கள் நிகழ்ந்து வரும் நிலையில்,