ஜோதிகா, சிம்ரன், கைரா அத்வானி: 'சந்திரமுகி 2' படத்தின் நாயகி குறித்து ராகவா லாரன்ஸ்!

  • IndiaGlitz, [Saturday,August 01 2020]

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் இயக்குனர் பி.வாசு இயக்கிய ‘சந்திரமுகி’ திரைப்படம் கடந்த 2005ஆம் ஆண்டு வெளியாகி மிகப்பெரிய வெற்றி பெற்ற நிலையில் 15 ஆண்டுகள் கழித்து இந்த படத்தின் இரண்டாம் பாகம் குறித்த அறிவிப்பு சமீபத்தில் வெளிவந்தது. ரஜினிகாந்த் நடிப்பில் பி.வாசு இயக்கத்தில் உருவாகவுள்ள ’சந்திரமுகி 2’ படம் உருவாகவிருப்பதாகவும் இதில் ராகவா லாரன்ஸ் முக்கிய வேடத்தில் நடிக்கவிருப்பதாகவும் உறுதி செய்யப்பட்ட செய்திகள் வெளியானது

இந்த நிலையில் ’சந்திரமுகி 2’ திரைப்படத்தில் வேட்டையன் என்ற கொடுங்கோல் மன்னன் கேரக்டரில் ராகவா லாரன்ஸ் நடிக்கவிருப்பதாகவும், முதல் பாகத்தில் நடித்த மனோதத்துவ டாக்டர் வேடத்திலேயே ரஜினிகாந்த் நடிப்பார் என்றும் கூறப்பட்டது. மேலும் சந்திரமுகி கேரக்டரில் முதல் பாகத்தில் நடித்த ஜோதிகாவே நடிப்பார் என்றும், அதன்பின் அந்த கேரக்டரில் சிம்ரன் அல்லது கைரா அத்வானி நடிப்பார் என்றும் கூறப்பட்டது.

இந்த நிலையில் இதுகுறித்து ராகவா லாரன்ஸ் விளக்கம் அளித்துள்ளார். சந்திரமுகி 2’ படத்தின் திரைக்கதை அமைக்கும் பணி தற்போது நடந்து வருவதாகவும், இந்த படத்தில் ஜோதிகா, சிம்ரன், கைரா அத்வானி நடிக்கவிருப்பதாக வெளிவந்த செய்தியில் உண்மையில்லை என்றும், இதுவரை நாயகி யார் என்பது குறித்த முடிவெடுக்கவில்லை என்றும் திரைக்கதை அமைக்கும் பணி முடிந்ததும் இதுகுறித்த அதிகாரபூர்வ அறிவிப்பு வெளியாகும் என்றும் தெரிவித்துள்ளார். இதனையடுத்து ‘சந்திரமுகி 2’ படத்தில் சந்திரமுகி கேரக்டரில் நடிப்பது யாராக இருக்கும் என்ற எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது

More News

சும்மா உட்கார்ந்து கொண்டே லட்சக்கணக்கில் சம்பாதிக்க முடியுமா? ஒரு ஆச்சரிய வீடியோ!

கஷ்டப்பட்டு இரவு பகலாக உழைத்தால் கூட ஆயிரக்கணக்கில் தான் வருமானம் வரும் என்ற நிலையில் இரண்டு மணி நேரம் சும்மா உட்கார்ந்திருந்த ஒருவர் லட்சக் கணக்கில் சம்பாதித்த தகவல்

பிளாஸ்மா தானம் செய்தால் ரூ.5 ஆயிரம் உதவித்தொகை!!! அதிரடி காட்டும் மாநிலம்!!!

கொரோனா சிகிச்சைக்கு இன்றுவரை முழுமையான சிகிச்சை மருந்துகள் எதுவும் இல்லாத நிலையில் பிளாஸ்மா சிகிச்சை விஞ்ஞானிகளிடையே புது நம்பிக்கையை அளித்திருக்கிறது

திருடனைக் கண்டுபிடிக்கும் மோப்பநாய் கொரோனாவையும் கண்டுபிடிக்குமா??? சுவாரசியத் தகவல்!!!

ஐக்கிய அரபு அமீரகம் தற்போது ஒரு சுவாரசியமான தகவலை வெளியிட்டு இருக்கிறது.

வாலிபர் அனுப்பிய ஆபாச மெசேஜ்: அதிர்ச்சியில் தற்கொலை செய்து கொண்ட 12ஆம் வகுப்பு மாணவி!

வாலிபர் ஒருவர் தொடர்ந்து ஆபாச மெசேஜ்களை அனுப்பி காதல் டார்ச்சர் செய்ததால் அதிர்ச்சி அடைந்த பன்னிரண்டாம் வகுப்பு மாணவி ஒருவர் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது 

இறந்த கணவரின் உயிர்த்தடத்தில் ரத்தம்: மனைவி செய்த செயலால் அதிர்ந்த போலீசார்!

மதுரை அருகே திடீரென வாலிபர் ஒருவர் இறந்த நிலையில் அவரது மனைவி செய்த செயலால் தான் அவர் இறந்தார் என்ற தகவலால் போலீசார் அதிர்ச்சி அடைந்தனர்