'ருத்ரன்' படத்தின் அட்டகாசமான செகண்ட் லுக்: ரிலீஸ் தேதியும் அறிவிப்பு!

  • IndiaGlitz, [Sunday,July 03 2022]

ராகவா லாரன்ஸ் நடித்த ’ருத்ரன்’ படத்தின் அட்டகாசமான செகண்டலுக் போஸ்டர் வெளியானதோடு இந்த படத்தின் ரிலீஸ் தேதியும் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.

ராகவா லாரன்ஸ், சரத்குமார் மற்றும் பிரியா பவானி சங்கர் நடிப்பில் தயாரிப்பாளர் கதிரேசன் இயக்கத்தில் உருவான திரைப்படம் ’ருத்ரன்’. இந்த படத்தின் படப்பிடிப்பு சமீபத்தில் முடிவடைந்த நிலையில் இந்த படத்தின் தொழில்நுட்ப பணிகள் தற்போது விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.

இந்த நிலையில் சற்று முன் இந்த படத்தின் அட்டகாசமான செகண்ட் லுக் போஸ்டரை தயாரிப்பாளர் மற்றும் இயக்குனர் கதிரேசன் தனது சமூக வலைத்தளத்தில் வெளியிட்டுள்ளார். இந்த புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகின்றன.

ஜிவி பிரகாஷ் இசையமைப்பில் உருவாகியுள்ள இந்த திரைப்படம் உலகம் முழுவதும் டிசம்பர் 23-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகும் என அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.
 

More News

'ராட்சசன்' ராம்குமாரின் அடுத்த பட ஹீரோ இந்த பிரபலமா? ரசிகர்கள் ஆச்சரியம்!

கடந்த 2018 ஆம் ஆண்டு விஷ்ணு விஷால், அமலாபால் நடிப்பில் ராம்குமார் இயக்கத்தில் வெளியான திரைப்படம்' ராட்சசன்'. இந்த திரைப்படம் மிகப் பெரிய வெற்றி பெற்றது என்பதும் 8 கோடியில் தயாரான

விவாகரத்துக்கு இதுதான் காரணம்: முதல்முறையாக மனம் திறந்த சமந்தா!

பிரபல நட்சத்திர தம்பதிகள் நாகசைதன்யா மற்றும் சமந்தா ஆகிய இருவரும் விவாகரத்து பெற்று பிரிந்துவிட்டனர் என்ற செய்தி அனைவரும் அறிந்ததே. ஆனால் இவர்களது பிரிவுக்கு என்ன காரணம் என இரு தரப்பில்

'ஜெயிலர்' படத்தில் இணையும் நெல்சனின் ஆஸ்தான நடிகர்!

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிக்கவிருக்கும் 'ஜெயிலர்' திரைப்படத்தில் இயக்குனர் நெல்சனின் மூன்று படங்களிலும் நடித்த ஆஸ்தான நடிகர் நடிக்க இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளன.

'பேச்சிலர்' திவ்யபாரதியின் அடுத்த படத்திற்கு விஜய் பட டைட்டில்!

 ஜிவி பிரகாஷ் நடித்த 'பேச்சிலர்' என்ற திரைப்படத்தில் நாயகியாக நடித்த நடிகை திவ்யபாரதியின் அடுத்த பட டைட்டிலாக விஜய்யின் சூப்பர்ஹிட் பட டைட்டில் தேர்வு செய்யப்பட்டுள்ளதாக தெரிகிறது.

'மாஸ்டர்', 'பீஸ்ட்' பாணியை 'வாரிசு' படத்திலும் தொடரும் விஜய்: ரசிகர்கள் உற்சாகம்!

விஜய் நடித்த 'மாஸ்டர்', 'பீஸ்ட்' உள்பட பல படங்களில் தொடரும் பாணியை 'வாரிசு' படத்திலும் தொடரயிருப்பதாக வெளிவந்திருக்கும் தகவல் ரசிகர்களுக்கு உற்சாகத்தை அளித்து வருகிறது.