close
Choose your channels

ரூ. 3 கோடியை அடுத்து ராகவா லாரன்ஸின் அடுத்த அதிரடி அறிவிப்பு

Saturday, April 11, 2020 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

கொரோனா தடுப்பு நிதியாக நடிகரும் இயக்குனருமான ராகவா லாரன்ஸ் ரூ.3 கோடி சமீபத்தில் நிதியுதவி செய்தார் என்ற செய்தியை ஏற்கனவே பார்த்தோம். இதனையடுத்து திரையுலகினர் மட்டுமின்றி பொதுமக்களும் அவருக்கு பாராட்டு தெரிவித்து வந்தனர்.

இந்த நிலையில் ராகவா லாரன்ஸ் தற்போது மீண்டும் ஒரு பதிவை தனது டுவிட்டரில் பதிவு செய்துள்ளார். அதில் தான் கொடுத்த நிதிக்காக அனைவரும் தன்னை பாராட்டியதாகவும் அவர்கள் அனைவருக்கும் நன்றி என கூறிய ராகவா, மேலும் சிலரிடம் இருந்து உதவி கேட்டு தனக்கு கோரிக்கை வந்ததாகவும் கூறியுள்ளார். ஒரு கட்டத்தில் தன்னால் அழைப்புகளுக்கு பதில் சொல்ல முடியவில்லை என்பதால் தன் உதவியாளர்களிடம் தான் பிசியாக இருப்பதாக சொல்ல சொல்லியதாகவும் கூறிய ராகவா, அதன்பின் தனது அறைக்கு சென்று யோசித்தபோது பொதுமக்கள் பசியால் அழுது கொண்டிருப்பதை கேள்விப்பட்டு தனக்கு நேற்றிரவு முழுவதும் தூக்கமே வரவில்லை என்றும் கூறியுள்ளார்.

அனைத்து கோவில்களும் தற்போது மூடியிருப்பதால் தற்போது பசியுடன் இருப்பவர்களுக்கு உதவி செய்தாலே கடவுளுக்கு சேவை செய்ததற்கு சமம் என்ற நிலையில் தற்போது எனது ஆடிட்டருடன் ஆலோசனை செய்து வருகின்றேன என்றும், இந்த பூமியில் நாம் பிறக்கும்போது எதையும் கொண்டு வரவில்லை, போகும்போது எதையும் கொண்டு செல்ல போவதில்லை என முடிவு செய்து தற்போது இன்று மாலை 5 மணிக்கு மேலும் சில அறிவிப்புகளை வெளியிடவுள்ளதாக ராகவா லாரன்ஸ் தெரிவித்துள்ளார். எனவே இன்று மாலை மேலும் சில கோடிகள் நிதியுதவி குறித்த அறிவிப்பை ராகவா லாரன்ஸ் அறிவிப்பார் என எதிர்பார்க்கப்படுகிறது.
 

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.