'ஜெய்பீம்' பார்வதி அம்மாள் காலில் விழுந்து ஆசி வாங்கிய ராகவா லாரன்ஸ்!

  • IndiaGlitz, [Monday,November 15 2021]

சூர்யா நடித்த ’ஜெய்பீம்’ திரைப்படம் சமீபத்தில் வெளியாகி மிகப்பெரிய வெற்றி பெற்ற நிலையில் இந்த படம் ராசாக்கண்ணு மற்றும் பார்வதி அம்மாள் ஆகியோர்களின் உண்மை கதை என்பதை படக்குழுவினர் ஏற்கனவே அறிவித்து இருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் பார்வதி அம்மாள் அவர்களின் குடும்பத்திற்கு ரூபாய் 10 லட்சம் நிதி உதவி செய்வதாகவும் அந்த நிதியுதவியின் மூலம் கிடைக்கும் வட்டியை பார்வதி அம்மாள் செலவு செய்து கொள்ளவும் என்றும் அவருடைய காலத்திற்கு பிறகு அவருடைய குழந்தைகளுக்கு அந்த பணம் சேரும் வகையில் ஏற்பாடு செய்யப்படும் என்றும் சூர்யா சமீபத்தில் அறிவித்திருந்தார்.

அதேபோல் நடிகர் மற்றும் இயக்குனர் ராகவா லாரன்ஸ் அவர்கள் பார்வதி அம்மாளுக்கு வீடு கட்டி தருவதாக ஏற்கனவே ஒப்புக் கொண்டிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த நிலையில் பார்வதி அம்மாள் அவர்களை நேரில் சென்று ராகவா லாரன்ஸ் பார்த்துள்ளார். அவரைப் பார்த்ததும் நீங்கள் என்னுடைய பாட்டி போலவே இருக்கின்றீர்கள் என்றும், என்னுடைய பாட்டி இப்போது உயிரோடு இல்லை, ஆனால் உங்கள் வடிவத்தில் என்னுடைய பாட்டியை நான் பார்க்கிறேன் என்று கூறி அவருடைய காலில் விழுந்து ஆசிர்வாதம் பெற்றார்.

எனக்கு எப்போதுமே அம்மா மற்றும் கடவுள் மீது தான் மிகுந்த நம்பிக்கை உள்ளது என்றும் உங்களை இவ்வாறு பார்க்க வேண்டும் என்று விதி இருக்கிறது என்றும் சூர்யா அவர்களின் முயற்சியினால் தான் இந்த சந்திப்பு நடந்தது என்றும் அவர் கூறினார். இந்த சந்திப்பு பெரும் நிகழ்ச்சியாக இருந்தது என்பது குறிப்பிடத்தக்கது.

More News

இந்த வாரமும் நாமினேஷனில் சிக்கிய கமல்ஹாசனால் எச்சரிக்கப்பட்டவர்!

பிக்பாஸ் வீட்டில் ஒவ்வொரு வாரமும் திங்கட்கிழமை அன்று அந்த வார இறுதியில் எலிமினேட் செய்யப்படுபவர் குறித்த நாமினேஷன் படலம் நடைபெறும் என்பது அனைவரும் தெரிந்ததே.

வயதில் சிறியவரை காதலிக்க ஆட்சேபனை இல்லை… நெட்டிசன்களை அலறவிட்ட இளம் நடிகை!

தெலுங்கு சினிமாவில் முன்னணி நடிகையாக வலம்வரும் ராஷ்மிகா மந்தனா,

மாலத்தீவு பயணம்… பிகினி புகைப்படத்தை ஷேர் செய்து ஷாக் கொடுத்த இளம் நடிகை!

பாலிவுட் நட்சத்திரமான சைஃப் அலிகான், அம்ரித் சிங்கின் மூத்த மகள் சாரா அலிகான்.

கேன்சரால் அவதிப்பட்ட பிரபல இயக்குநர் மரணம்… திரையுலகினர் அதிர்ச்சி!

நடிகர் அர்ஜுன் நடிப்பில் வெளியான “செங்கோட்டை“ திரைப்படத்தை இயக்கியதன் மூலம் தமிழ் சினிமாவில் பிரபலமானவர் இயக்குநர்

அல்லு அர்ஜூனின் 'புஷ்பா' படத்தில் சமந்தா: ஒரு ஆச்சரிய தகவல்

பிரபல தெலுங்கு நடிகர் அல்லு அர்ஜுன் நடிப்பில் சுகுமார் என்பவர் இயக்கத்தில் உருவாகி வரும் திரைப்படம் 'புஷ்பா' என்பதும் இந்த படத்தின் படப்பிடிப்பு சமீபத்தில் முடிவடைந்து போஸ்ட் புரொடக்ஷன் பணிகள்