50 மாற்றுத்திறனாளிகளுக்கு தலா ரூ.25 ஆயிரம்: ராகவா லாரன்ஸின் அடுத்த நிதியுதவி

ஊரடங்கு உத்தரவு காரணமாக வறுமையில் வாடும் பொதுமக்களுக்கும் திரையுலகைச் சேர்ந்தவர்களுக்கும் ஏற்கனவே நடிகரும் இயக்குனருமான ராகவா லாரன்ஸ் ரூபாய் ரூ.4 கோடிக்கு மேல் நிதியுதவி என்பதும் அதுமட்டுமின்றி ஏராளமான பொதுமக்களுக்கு அரிசி, பருப்பு உள்பட பொருளுதவியும் செய்துள்ளார் என்பதும் தெரிந்ததே. இருப்பினும் அவரது வள்ளல் தன்மை இன்னும் அதிகரித்துக் கொண்டே இருக்கிறது.

சற்றுமுன் வந்த தகவலின்படி மாற்றுத்திறனாளிகள் 50 பேருக்கு தலா ரூபாய் 25 ஆயிரத்தை அவர்களுடைய வங்கிக் கணக்கில் நேரடியாக ராகவா லாரன்ஸ் டெபாசிட் செய்துள்ளதாக செய்திகள் வெளிவந்துள்ளது.

ஊரடங்கு உத்தரவு காரணமாக ஆரோக்கியமாக இருக்கும் பொது மக்களே கஷ்டப்பட்டு கொண்டிருக்கும் நிலையில் மாற்று திறனாளிகள் படும் கஷ்டத்தை கூற வேண்டிய அவசியமே இல்லை. இந்த நிலையில் அவர்களுக்கு உதவும் வகையில் 50 மாற்றுத்திறனாளிகளை தேர்வு செய்து அவர்களுக்கு முதல் கட்டமாக ரூபாய் 25 ஆயிரம் நிதி உதவிகளை நடிகர் ராகவா லாரன்ஸ் வழங்கியுள்ளார். இந்த பணத்தை அவர் நேரடியாக பாதிக்கப்பட்டவர்களின் வங்கி கணக்கிற்கு செலுத்தி உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. 50 பேர்களுக்கு தலா ரூ.25 ஆயிரம் என்றால் அவர் மொத்தம் 12.5 லட்ச ரூபாய் அனுப்பியுள்ளார் என்பது குறிப்ப்பிடத்தக்கது. இந்த பணத்தை பெற்றுக்கொண்ட மாற்றுத்திறனாளிகள் தற்போது ராகவா லாரன்ஸுக்கு நன்றி தெரிவித்து வருகின்றனர்.
 

More News

அஜித்தை புகழ்ந்த விஜய்யை ரசிக்கும் பிரபல நடிகர்

தல அஜித்தின் பிறந்த நாள் இன்னும் ஒருசில தினங்களில் வர உள்ளதை அடுத்து இந்த ஆண்டு அவருடைய பிறந்த நாளை சிறப்பாக கொண்டாட அஜித் ரசிகர்கள் முடிவு செய்துள்ளனர்.

சிறுபட்ஜெட் தயாரிப்பாளர்களுக்கு லாபம் கொடுத்துள்ள கொரோனா: பிரபல இயக்குனர்

கடந்த சில ஆண்டுகளாகவே சின்ன பட்ஜெட் படங்களுக்கு திரையரங்குகள் கிடைக்காத நிலையும், அப்படியே கிடைத்தாலும் காலைக்காட்சி மட்டுமே கிடைக்கும் நிலையும் இருந்தது.

750 தயாரிப்பாளருக்கு சூப்பர் ஸ்டார் ரஜினியின் உதவி: நன்றி கூறிய பிரபல தயாரிப்பாளர்

கொரோனா காரணமாக அமல்படுத்தப்பட்டுள்ள ஊரடங்கு காரணமாக பாதிக்கப்பட்ட திரையுலகினர்கள் பலருக்கு சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நிதியுதவி, பொருளுதவி செய்து வரும் நிலையில் தற்போது தயாரிப்பாளர் சங்க

சென்னையில் 4 நாட்களுக்கு மழை பெய்யும்: தமிழ்நாடு வெதர்மேன்

சென்னையில் கடந்த சில நாட்களாக வெயிலின் தாக்கம் அதிகம் இருந்ததால் மக்கள் பெரும் அவதியில் இருந்த நிலையில் இன்று அதிகாலை திடீரென சூறைக்காற்றுடன் கூடிய கனமழை பெய்ததால் சென்னையே ஜில்லென்று மாறியது. 

தாயின் இறுதிச்சடங்கை கண்ணீருடன் வீடியோகாலில் பார்த்த பிரபல நடிகர்

கொரோனா வைரஸ் காரணமாக நாடு முழுவதும் கடந்த ஒரு மாதத்திற்கும் மேலாக ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளதால் எந்தவித போக்குவரத்தும் இல்லாமல் உள்ளது.