போலீஸ் புகார் வேண்டாம், பொறுமையை கடைபிடியுங்கள்: ரசிகர்களுக்கு ராகவா லாரன்ஸ் வேண்டுகோள்

  • IndiaGlitz, [Friday,April 26 2019]

ராகவா லாரன்ஸ் குறித்து ஒருசிலர் சர்ச்சைக்குரிய கருத்துக்களை தெரிவித்து வருவதாகவும், அவர்கள் மீது ராகவா லாரன்ஸ் ரசிகர்கள் போலீஸ் புகார் கொடுத்துள்ளதாகவும் செய்திகள் வெளிவந்துள்ளது. இந்த நிலையில் மும்பையில் 'காஞ்சனா' இந்தி படத்தின் படப்பிடிப்பில் இருக்கும் ராகவா லாரன்ஸ் தனது ரசிகர்களுக்கு ஒரு அன்பு வேண்டுகோளை விடுத்துள்ளார். இதுகுறித்து அவர் அறிக்கை ஒன்றில் கூறியிருப்பதாவது:

ரசிகர்கள் மாற்றுத்திறனாளிகள் திரு நங்கைகள் மற்றும் ரசிகர்களுக்கு ராகவா லாரன்ஸின் அன்பு வேண்டுகோள்

காஞ்சனா 3 படத்தை மாபெரும் வெற்றிப் படமாக்கிய ரசிகர்களுக்கு மிக்க நன்றி. .என் மீது அன்புள்ளவர்களுக்கு ஒரு வேண்டுகோள்... என்னை பற்றியும் எனது சேவைகளை பற்றியும் அவதூறு பேசுவர்களை பற்றி கவலை படாதீர்கள்...

என் மீது அக்கறை உள்ள ஒரு சில மாற்றுத்திறனாளிகளும் திருநங்கைகளும் போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் சம்மந்தப்பட்டவர் மீது புகார் அளிப்பதாக கேள்விப் பட்டேன்... அப்படி எதுவும் செய்யாதீர்கள்.. பொறுமையை கடை பிடியுங்கள்... நாம் நமது வழியில் நல்லதை மட்டும் நினைப்போம்.. நல்லதை யே செய்வோம்.. அவர்கள் அவர்கள் வழியில் போகட்டும்..

எனக்கு ஒரு சின்ன பிரச்சனை என்றால் உடனே ஓடி வருகிற உங்கள் ஒவ்வொருவருக்கும் என் குடும்பத்தார் சார்பில் நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன்.. நான் மும்பையில் 'காஞ்சனா' இந்தி படத்தின் படப்பிடிப்பில் இருக்கிறேன்.. படப்பிடிப்பு முடிந்து வந்தவுடன் ஒரு நல்ல முடிவு எடுப்போம்.. அது வரை அமைதி காப்போம்... கடவுள் நமக்கான நல்லதை செய்வார்..

நமக்கு கெடுதல் நினைப்பவர்களுக்கும் நாம் நல்லது நடக்க ஆண்டவனை பிரார்த்திப்போம்... நம்மை பற்றி புரிந்து கொள்ள ஆண்டவன் அருள் அவர்களுக்கு கிடைக்கட்டும்

இவ்வாறு ராகவா லாரன்ஸ் தனது அறிக்கையில் குறிப்பிட்டுள்ளார்
 

More News

கிரவுண்டுக்குள்ள இறங்கிட்டா எல்லாத்தையும் மறந்துடுவாங்க: மனம் திறக்கும் கோமதியின் தோழி

தங்கமங்கை கோமதி இந்தியாவுக்கு தங்கப்பதக்கம் பெற்றுத்தந்து நாட்டிற்கே பெருமை சேர்த்த நிலையில் கோமதிக்கு வாழ்த்துக்களும் பாராட்டுக்களும் குவிந்து வருவது தெரிந்ததே

இவ்வளவு ஸ்லிம்மா? சிம்புவின் லேட்டஸ்ட் ஆச்சரிய புகைப்படம்

நடிகர் சிம்பு கடந்த சில மாதங்களாக உடல் எடை அதிகரித்து காணப்பட்டார். அவர் நடிப்பில் சமிபத்தில் வெளிவந்த 'வந்தா ராஜா தான் வருவேன்' உள்ளிட்ட சில படங்களில் அவரது உடல் எடை

அஜித்தை விரைவில் சம்மதிக்க வையுங்கள்: பிரபல நடிகை கோரிக்கை!

மறைந்த நடிகை ஸ்ரீதேவியின் கணவர் போனிகபூர் தயாரிப்பில் அஜித் நடித்து முடித்துள்ள 'நேர் கொண்ட பார்வை' திரைப்படம் வரும் ஆகஸ்ட் 10ஆம் தேதி வெளியாகவுள்ள நிலையில்

ஜிவி பிரகாஷ் பட நாயகி மருத்துவமனையில் அனுமதி! அறுவை சிகிச்சையா?

ஜிவி பிரகாஷ் நடிப்பில் இயக்குனர் எழில் இயக்கத்தில் உருவாகி வரும் படம் ஒன்றின் படப்பிடிப்பு கடந்த மார்ச் மாதம் முதல் நடைபெற்று வருகிறது.

'99 சாங்ஸ்' ஹீரோவை வாழ்த்திய ஏ.ஆர்.ரஹ்மான்

ஆஸ்கார் நாயகன் ஏ.ஆர்.ரஹ்மான் தயாரிப்பு மற்றும் இசையில் உருவான '99 சாங்ஸ்' என்ற திரைப்படம் தமிழ், தெலுங்கு மற்றும் இந்தி மொழிகளில் வரும் ஜூன் 21ஆம் தேதி உலகம் முழுவதும் வெளியாகவுள்ளது