கேள்விப்பட்டதைவிட அதிகம், உடனே கிளம்பி வாருங்கள்: ராகவா லாரன்ஸ் அழைப்பு

  • IndiaGlitz, [Monday,November 26 2018]

கஜா புயல் சேதங்கள் கேள்விப்பட்டதைவிட அதிகம் இருப்பதாகவும், இந்த சேதத்தை சரிசெய்ய அனைவரும் இணைந்தால் மட்டுமே முடியும் என்றும் நடிகரும் இயக்குனருமான ராகவா லாரன்ஸ் அழைப்பு விடுத்துள்ளார்.

கஜா புயலால் பாதிக்கப்பட்ட டெல்டா மாவட்ட மக்களுக்கு உதவி செய்யும் வகையில் வீடுகளை இழந்த 50 பேர்களுக்கு வீடுகள் கட்டித்தருவதாக நடிகர் ராகவா லாரன்ஸ் சமீபத்தில் அறிவித்தார். இந்த நிலையில் இன்று சேத நிலைமையை நேரில் கண்டறிய டெல்டா பகுதிக்கு சென்ற ராகவா லாரன்ஸ் தனது சமூக வலைத்தளத்தில் குறிப்பிட்டுள்ளதாவது:

சென்னையில் இருந்து நான் கேள்விப்பட்டதைவிட இங்கு நேரில் வந்து பார்க்கும்போதுதான் சேதத்தின் மதிப்பு மிகப்பெரிய அளவில் உள்ளது என்று தெரிகிறது. இந்த சேதத்தை சரிசெய்ய வேண்டும் என்றால் நாம் அனைவரும் இணைந்து உதவி செய்தால் மட்டுமே சாத்தியம். எனவே ஒவ்வொருவரும் தங்களால் முடிந்த உதவியை செய்து இப்பகுதி மக்களின் இயல்பு வாழ்க்கை திரும்ப உதவி செய்யுங்கள் என்று தாழ்மையுடன் கேட்டுக்கொள்கிறேன்' என்று கூறியுள்ளார்.