2024 நாடாளுமன்ற தேர்தல்.. ராதிகா பின்னடைவு.. விஜய பிரபாகரன் முன்னிலை..!

  • IndiaGlitz, [Tuesday,June 04 2024]

நாடாளுமன்ற தேர்தல் வாக்கு எண்ணிக்கை இன்று காலை 8 மணி முதல் நடைபெற்று வரும் நிலையில் அகில இந்திய அளவில் பாஜக கூட்டணி அதிக தொகுதிகளிலும், தமிழக அளவில் திமுக கூட்டணி அதிக தொகுதிகளிலும் முன்னிலையில் இருந்து வருகிறது.

இந்த நிலையில் தமிழகத்தில் சில ஸ்டார் தொகுதிகள் இருந்து வரும் நிலையில் அதில் ஒரு முக்கியமான தொகுதியாக விருதுநகர் தொகுதி பார்க்கப்பட்டது. இந்த தொகுதியில் தான் திரை உலகை சேர்ந்த ராதிகா மற்றும் விஜய பிரபாகரன் ஆகிய இருவருமே போட்டியிட்டனர்.

விருதுநகர் தொகுதியில் பாஜக வேட்பாளராக ராதிகா சரத்குமார், அதிமுக கூட்டணியின் தேமுதிக வேட்பாளராக விஜய பிரபாகரன் ஆகிய இருவரும் போட்டியிட்ட நிலையில் சிட்டிங் காங்கிரஸ் எம்பி மாணிக்கம் தாக்கூர் அவர்களும் போட்டியிட்டார்.

இந்த நிலையில் தற்போது முன்னிலை விவரங்கள் வெளிவந்து கொண்டிருக்கும் நிலையில் தேமுதிகவின் விஜய பிரபாகரன் 73622 வாக்குகள் பெற்று முன்னிலையில் உள்ளார். இரண்டாவது இடத்தில் காங்கிரஸ் கட்சியின் மாணிக்கம் தாகூர் 68455 வாக்குகள் பெற்று இரண்டாம் இடத்தில் உள்ளார். பாஜக வேட்பாளர் ராதிகா சரத்குமார் 27240 பெற்றுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. நாம் தமிழர் கட்சியின் கவுசிக் இந்த தொகுதியில் 14925 வாக்குகள் பெற்றுள்ளார்.

விஜய பிரபாகரன் வாங்கிய வாக்குகளை விட ராதிகா கிட்டத்தட்ட 46 ஆயிரம் குறைவாக பெற்றுள்ளதால் அவர் வெற்றி பெற வாய்ப்பே இல்லை என்று தான் கூறப்படுகிறது. ஆனால் அதே நேரத்தில் காங்கிரஸ் வேட்பாளருக்கும் விஜய் பிரபாகரனுக்கும் இடையே சுமார் 5000 வாக்குகள் மட்டுமே வித்தியாசம் இருப்பதால் சில சுற்றுகளில் முடிவுகள் மாற வாய்ப்பு இருப்பதாகவும் கூறப்படுகிறது. இந்த நிலவரம் இன்று காலை 11.40 மணி நிலவரம் என்ற நிலையில் இன்று மாலைக்குள் இந்த தொகுதியில் வெற்றி பெறுவது யார் என்பது தெரிந்து விடும்.

More News

கிரியா யோகம்: உடல் மற்றும் மனதை தூய்மை செய்யும் சக்தி வாய்ந்த யோகம்!

மனித வாழ்க்கையில் மிக முக்கியமான விஷயம் ஆரோக்கியம் மற்றும் மன அமைதி. இதை அடைய உதவும் ஒரு சக்தி வாய்ந்த யோகம் தான் கிரியா யோகம்.

அஜித் மகளை வீடியோ எடுத்த மர்ம நபர்..  குவியும் கண்டனங்கள்..!

அஜித் மகள் தனது தோழியுடன் தனி அறையில் இருக்கும் போது மர்மநபர் ஒருவர் வீடியோ எடுத்த நிலையில் அந்த நபருக்கு கண்டனங்கள் குவிந்து வருகிறது.

தனது பெயரை தவறாக பயன்படுத்திய மர்ம நபர்.. எச்சரிக்கை விடுத்த ஷாலினி அஜித்..!

அஜித்தின் மனைவி ஷாலினி அஜித் பெயரை மர்ம நபர் ஒருவர் தவறாக பயன்படுத்தியதை அடுத்து அவர் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ரசிகர்களுக்கு விழிப்புணர்வை ஏற்படுத்தி உள்ளார்.

ஹீரோவா ஜெயிச்சிட்டார் சூரி.. 'கருடன்' படத்தின் மூன்று நாள் வசூல் இத்தனை கோடியா?

தமிழ் சினிமாவின் முன்னணி காமெடி நடிகர்களில் ஒருவரான சூரி, ஏற்கனவே 'விடுதலை' படத்தில் ஹீரோவாக நடித்த நிலையில் அந்த படம் நல்ல வெற்றி பெற்றது என்பதும் சூரியை ஒரு ஹீரோவாக

இந்தியாவில் இப்படியெல்லாம் அழகான இடங்கள் இருக்கிறதா? ஆண்ட்ரியாவின் அசத்தல் புகைப்படங்கள்..!

நடிகை ஆண்ட்ரியா சிக்கிம் மாநிலத்தில் சுற்றுப்பயணம் செய்த புகைப்படங்களை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவு செய்துள்ள நிலையில் 'இந்தியாவில் இப்படி எல்லாம் அழகான இடங்கள் உள்ளதா?