ஜெயில் தண்டனை விதிக்கப்பட்ட நிலையில் நடிகை ராதிகாவுக்கு ஏற்பட்ட திடீர் சோதனை!

காசோலை மோசடி வழக்கில் சரத்குமார் மற்றும் அவரது மனைவி ராதிகா ஆகிய இருவருக்கும் சிறப்பு நீதிமன்றம் ஒரு ஆண்டு சிறப்பு ஜெயில் தண்டனை விதித்தது என்பதை ஏற்கனவே பார்த்தோம்.

இந்த நிலையில் சரத்குமார் மற்றும் ராதிகா தரப்பிலிருந்து இந்த தண்டனையை நிறுத்தி வைக்க வேண்டும் என மேல்முறையீடு மனு செய்யப்பட்டது. இந்த மனுவின் மீது விசாரணை நடத்திய நீதிமன்றம் இருவரது தண்டனையை நிறுத்தி வைக்க உத்தரவிட்டு உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில் நடிகை ராதிகாவுக்கு திடீரென கொரோனா வைரஸ் பாதிப்பு ஏற்பட்டுள்ளதால் அவர் அவர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருவதாகவும் கூறப்படுகிறது. இதனால்தான் அவர் மேல்முறையீட்டு மனு மீதான விசாரணையின்போது அவர் நேரில் ஆஜராக முடியவில்லை என்றும் நீதிமன்றத்தில் விளக்கம் அளிக்கப்பட்டது.

ராதிகா மற்றும் சரத்குமார் ஆகிய இருவரும் கடந்த சில நாட்களாக தமிழகம் முழுவதும் தீவிர தேர்தல் பிரசாரம் செய்தனர் என்பது குறிப்பிடத்தக்கது. அதேபோல் சரத்குமார் சமீபத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டு மீண்ட நிலையில் தற்போது ராதிகாவுக்கும் கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது. ராதிகா சமீபத்தில் தான் கொரோனா தடுப்பூசியை எடுத்து கொண்டார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

More News

ஏஜிஎஸ் நிறுவனத்தின் அடுத்த படத்தில் நாயகியாகும் 'குக் விக் கோமாளி' பிரபலம்!

தளபதி விஜய் நடிப்பில் அட்லி இயக்கத்தில் உருவான 'பிகில்' திரைப்படத்தை தயாரித்த ஏஜிஎஸ் எண்டர்டெயின்மெண்ட் என்ற நிறுவனத்தின் அடுத்த படத்திற்கான பூஜை இன்று நடைபெற்றது.

செக் மோசடி....சரத், ராதிகா-வுக்கு ஓராண்டு சிறை தண்டனை....!

நடிகர்கள் ராதிகா,சரத் குமார் தம்பதிக்கு, செக் மோசடி காரணமாக ஓராண்டு சிறை தண்டனை விதிக்க சென்னை சிறப்பு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. 

சர்ச்சை பேச்சு...உதயநிதிக்கு தேர்தல் ஆணையம் நோட்டீஸ்...!

உதயநிதி ஸ்டாலின் பிரச்சாரத்தின் போது முன்னாள் மத்திய அமைச்சர்களின் இறப்பு குறித்து பேசுவது கடும் சர்ச்சைக்குள்ளாகியுள்ளது.

ரொம்ப வருத்தமா இருக்கு: அஜித் செல்பி விவகாரம் குறித்து டிடி பதிவு செய்த டுவிட்!

தமிழகத்தில் நேற்று சட்டமன்ற பொதுத்தேர்தல் நடந்த நிலையில் இந்த தேர்தலில் தனது ஜனநாயக கடமையை ஆற்ற மனைவி ஷாலினியுடன் வந்த அஜித்தை ரசிகர்கள் முண்டியடித்து கொண்டு பார்க்க முயன்றதால்

பிக்பாஸ் ஷிவானியின் 'நத்திங் ஸ்பெஷல்' புகைப்படம்: இணையத்தில் வைரல்!

பிக்பாஸ் நிகழ்ச்சியின் மூலம் புகழ்பெற்ற தொலைக்காட்சி நடிகை ஷிவானி அவ்வப்போது தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவு செய்யும் புகைப்படங்கள் வைரலாகும் என்பது தெரிந்ததே