விஜய்ன்னு பேரு வச்சாலே சூப்பர் ஆயிடுறாங்க: அண்ணாதுரை ஆடியோ விழாவில் ராதிகா

  • IndiaGlitz, [Wednesday,November 15 2017]

விஜய் ஆண்டனி நடித்த 'அண்ணாதுரை' படத்தின் இசை வெளியீட்டு விழா இன்று நடைபெற்றது. இந்த விழாவில் விஜய் ஆண்டனி, இயக்குனர் சீனிவாசன், தயாரிப்பாளர் ராதிகா உள்பட படக்குழுவினர் அனைவரும் கலந்து கொண்டனர்.

இந்த விழாவில் பேசிய ராதிகா, 'இயக்குனர் சீனிவாசன் இந்த படத்தின் கதையை என்னிடம் சொன்னதும் நான் விஜய் ஆண்டனியிடம் கதை கூறி அவரிடம் சம்மதம் பெற சொன்னேன். நான் தயாரிக்கின்றேன் என்று கேள்விப்பட்டவுடன் விஜய் ஆண்டனி உடனே நடிக்க ஒப்புக்கொண்டதாக பின்னர் அறிந்த்தேன். அவருக்கு எனது நன்றிகள்

விஜய் ஆண்டனியிடம் இரண்டு விஷயங்கள் நான் கவனித்தேன். ஒன்று உண்மை, இன்னொன்று உழைப்பு. இந்த இரண்டும் எனக்கு ரொம்ப பிடிக்கும். என்னை எத்தனை மணி நேரம் வேலை செய்ய சொன்னாலும் செய்வேன், ஏனெனில் எனக்கு உழைப்பின் மீதுள்ள நம்பிக்கை. அதேபோல் எந்த விபரீதத்தையும் பற்றி கவலைப்படாமல் உண்மை பேசுவேன். அந்த உண்மை, உழைப்பை நான் விஜய் ஆண்டனியிடமும் பார்த்தேன்.

இந்த விஜய்ன்னு பேரு வச்சவங்க எல்லாருமே சூப்பர் ஆயிடுறாங்க. அது ஜோசப் விஜய்யாக இருந்தாலும் சரி, விஜய் ஆண்டனியாக இருந்தாலும் சரி. பார்ப்பதற்கு ஒன்றுமே தெரியாத அப்பாவிகளாக இருப்பார்கள், ஆனால் அவர்களிடம் தான் திறமை கொட்டி கிடக்கும்' என்று பேசினார்.  

More News

சூர்யாவின் அடுத்த படத்தில் '8 தோட்டாக்கள்'' பட நடிகை

ஸ்ரீகணேஷ் இயக்கிய '8 தோட்டாக்கள்' திரைப்படம் கடந்த சில மாதங்களுக்கு முன் வெளியாகி நல்ல வெற்றி பெற்றது என்பது அனைவரும் அறிந்ததே. இந்த படத்தில் நடித்த நடிகை மீரா மிதுனுக்கு சூர்யாவின் அடுத்த படத்தில்

முதல்முறையாக வாழ்த்துக்களுடன் மகிழ்ச்சியை பரிமாற்றம் செய்து கொண்ட கமல்-ரஜினி

ரஜினிகாந்த், கமல்ஹாசன் ஆகிய இருவருமே சமூக வலைத்தளங்களில் குறிப்பாக டுவிட்டரில் பிரபலம் என்றாலும் ஒருவர் கூறிய கருத்தை இன்னொருவர் ரீடுவீட் செய்ததோ, வாழ்த்து தெரிவித்ததோ கிடையாது

சட்டமன்ற கூட்டத்தை கட் அடித்துவிட்டு குத்தாட்டம் ஆடிய எம்.எல்.ஏ

கர்நாடக மாநிலத்தில் தற்போது சட்டமன்ற கூட்டத்தில் கலந்து கொள்ளாமல் இசை வெளியிட்டு விழாவில் கலந்து கொண்டு அந்த விழாவில் குத்தாட்டம் ஆடியதாக எம்.எல்.ஏ ஒருவர் மீது குற்றஞ்சாட்டப்பட்டுள்ளது.

கொன்று பார், வென்று தீர்வேன்: குத்திக்கிழிக்கும் வீடியோ குறித்து கமல்

கடந்த சில நாட்களுக்கு முன்னர் 'இந்து தீவிரவாதிகள் இனி இல்லை என்று சொல்ல முடியாது' என்ற கமல்ஹாசனின் கருத்துக்கு நாடு முழுவதும் பயங்கர எதிர்ப்பு கிளம்பியது.

கேரள அரசின் துணிச்சலான நடவடிக்கைக்கு கமல் பாராட்டு

பிறப்பு சான்றிதழில் சாதி பெயரை குறிப்பிட வேண்டிய அவசியம் இல்லை என்று சமீபத்தில் கேரள அரசு அரசாணை ஒன்றை பிறப்பித்து அதனை சுற்றறிக்கையாக வெளியிட்டிருந்தது.