தமிழ் திரையுலகிலும் தவறு இருக்கிறது: நடிகைகளுக்கு பாலியல் கொடுமை குறித்து ராதிகா..!

  • IndiaGlitz, [Monday,September 02 2024]

மலையாள திரையுலகில் நடிகைகளுக்கு பாலியல் தொல்லை இருப்பதாக ஹேமா கமிஷன் அறிக்கை வெளியான நிலையில் தமிழ் தெலுங்கு திரை உலகிலும் சில நடிகைகள் தங்களுக்கு நடந்த பாலியல் கொடுமை கொடுத்து பேச ஆரம்பித்து விட்டதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

இந்த நிலையில் நடிகை ராதிகா ஏற்கனவே கேரவனில் ரகசிய கேமரா வைத்து நடிகைகள் உடை மாற்றுவதை பார்த்து ரசித்து வருகிறார்கள் என திடுக்கிடும் குற்றச்சாட்டை கூறிய நிலையில் தற்போது இது குறித்து மேலும் சில கருத்துக்களை தெரிவித்துள்ளார். நடிகர் ராதிகா இது குறித்து கூறியதாவது:

எங்கேயோ ஒரு இடத்தில் தவறுகள் நடக்கும், என்னுடைய வாழ்க்கையில் வந்த எல்லாப் பிரச்சினைகளையும் நான் தனியாக நான் எதிர்கொண்டுள்ளேன். இப்போது வரை பெண்கள் போராடிதான் வருகிறோம். 80களில் இருந்து பார்க்கிறேன் எனக்கு தெரியும் தமிழ் திரையுலகிலும் இது போன்று இருக்கிறது. யாருடைய பெயரையும் குறிப்பிட விரும்பவில்லை.

4 நாட்களுக்கு முன்பு எஸ்.ஐ.டி.,யில் இருந்து என்னைத் தொடர்பு கொண்டார்கள், அப்போது எஸ்.ஐ.டி.,யிடம் விளக்கத்தை மட்டும் அளித்தேன், நான் புகார் எதுவும் அளிக்கவில்லை.

தமிழ் திரையுலகிற்கு ஒரு கமிட்டி அமைக்க வேண்டும் ஆனால் தமிழ் திரையுலகில் இப்போது பெண்களுக்கு எதிரான குற்றங்கள் குறைந்து விட்டது. படித்த இளைஞர்கள் நிறைய பேர் வந்து விட்டார்கள் அதனால் நிறைய மாற்றங்கள் வந்துவிட்டது’ என்று தெரிவித்தார்.