close
Choose your channels

3 பேர் சஸ்பெண்ட் விவகாரம். விஷாலுக்கு ராதிகா சரமாரி கேள்வி

Tuesday, September 13, 2016 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

முன்னாள் நடிகர் சங்க நிர்வாகிகளான சரத்குமார், ராதாரவி, மற்றும் வாகை சந்திரசேகர் ஆகியோர் நடிகர் சங்கத்தின் பணத்தை முறைகேடு செய்ததாக தற்காலிக சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளனர் என்பதை நேற்று பார்த்தோம். இந்நிலையில் இதுகுறித்து சரத்குமாரின் மனைவியும் பிரபல நடிகையுமான ராதிகா விஷால் மற்றும் கார்த்திக்கு அடுக்கடுக்கான கேள்விகளை தனது சமூக வலைத்தளத்தில் கேட்டுள்ளார்.
ரூ.100 கோடி நடிகர் சங்கத்தின் பணத்தில் முறைகேடு செய்யப்பட்டுள்ளதாக கூறி தலைவர் நாசர் வழக்கு தொடர்ந்துள்ளார். ஆனால் எதில் முறைகேடு நடந்துள்ளது என்ற விளக்கம் எதுவும் இல்லை. சம்பந்தப்பட்டவர்களிடம் எவ்வித விளக்கமும் கேட்காமல் சஸ்பெண்ட் செய்துள்ளார்கள்
எந்தவித ஆதாரமும் இல்லாமல் விஷால், கார்த்தி கூறியதை கேட்டு நடிகர் சங்க தலைவர் வழக்கு தொடர்ந்து இருப்பது முறையற்ற செயல். இதன்மூலம் விஷால், கார்த்தி ஆகியோர் தங்கள் அதிகபட்ச வெறுப்பை காட்டியுள்ளனர் என்று ராதிகா ஆதங்கத்துடன் தனது சமூக வலைத்தளத்தில் தெரிவித்துள்ளார்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.