3 பேர் சஸ்பெண்ட் விவகாரம். விஷாலுக்கு ராதிகா சரமாரி கேள்வி

  • IndiaGlitz, [Tuesday,September 13 2016]

முன்னாள் நடிகர் சங்க நிர்வாகிகளான சரத்குமார், ராதாரவி, மற்றும் வாகை சந்திரசேகர் ஆகியோர் நடிகர் சங்கத்தின் பணத்தை முறைகேடு செய்ததாக தற்காலிக சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளனர் என்பதை நேற்று பார்த்தோம். இந்நிலையில் இதுகுறித்து சரத்குமாரின் மனைவியும் பிரபல நடிகையுமான ராதிகா விஷால் மற்றும் கார்த்திக்கு அடுக்கடுக்கான கேள்விகளை தனது சமூக வலைத்தளத்தில் கேட்டுள்ளார்.
ரூ.100 கோடி நடிகர் சங்கத்தின் பணத்தில் முறைகேடு செய்யப்பட்டுள்ளதாக கூறி தலைவர் நாசர் வழக்கு தொடர்ந்துள்ளார். ஆனால் எதில் முறைகேடு நடந்துள்ளது என்ற விளக்கம் எதுவும் இல்லை. சம்பந்தப்பட்டவர்களிடம் எவ்வித விளக்கமும் கேட்காமல் சஸ்பெண்ட் செய்துள்ளார்கள்
எந்தவித ஆதாரமும் இல்லாமல் விஷால், கார்த்தி கூறியதை கேட்டு நடிகர் சங்க தலைவர் வழக்கு தொடர்ந்து இருப்பது முறையற்ற செயல். இதன்மூலம் விஷால், கார்த்தி ஆகியோர் தங்கள் அதிகபட்ச வெறுப்பை காட்டியுள்ளனர் என்று ராதிகா ஆதங்கத்துடன் தனது சமூக வலைத்தளத்தில் தெரிவித்துள்ளார்.

More News

இணைந்து செயல்பட விரும்புகிறோம். தயாரிப்பாளர் சங்கத்திற்கு நடிகர் சங்கம் கடிதம்

கடந்த சில நாட்களாக தயாரிப்பாளர் சங்கத்தையும் நடிகர் சங்கத்தின் புதிய நிர்வாகிகள் கைப்பற்ற போவதாக செய்திகள் வெளிவந்து கொண்டிருக்கும் நிலையில்...

வெங்கட்பிரபுவின் 'சென்னை-28 2ஆம் பாகத்தின் ரிலீஸ் தேதி

பிரபல இயக்குனர் வெங்கட்பிரபு இயக்கத்தில் உருவாகி வந்த 'சென்னை 600028' படத்தின் இரண்டாம் பாகம் கடந்த சில நாட்களுக்கு...

மணிரத்னம் இயக்கத்தில் மற்றொரு சூப்பர் ஸ்டாரின் மகன்

இந்திய திரையுலகில் மணிரத்னம் இயக்கத்தில் நடிக்க வேண்டும் என்று விரும்பாத நடிகர், நடிகைகளே இல்லை என்று கூறலாம். உலக அழகி ஐஸ்வர்யாராய்...

நன்றியை மாறி மாறி பரிமாறி கொண்ட சிம்பு-கவுதம் மேனன்

கவுதம் மேனன் நடிப்பில் சிம்பு, மஞ்சிமா மோகன் நடித்து வந்த 'அச்சம் என்பது மடமையடா' படத்தின் படப்பிடிப்பு தற்போது முற்றிலும் முடிவடைந்துள்ள நிலையில் சிம்புவும், கவுதம் மேனனும்...

சூர்யாவின் திடீர் மாற்றத்திற்கு நயன்தாரா காரணமா?

ரஜினியின் 'கபாலி' இசை வெளியீட்டு விழாவில் சூர்யாவின் அடுத்த படத்தை இயக்கவுள்ளதாக ரஞ்சித் அறிவித்தார். சிங்கம் 3' படத்தை அடுத்து சூர்யா...