'கபாலி'க்கு பின் ராதிகா ஆப்தேவின் அடுத்த தமிழ் படம்

  • IndiaGlitz, [Monday,November 21 2016]

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடித்த 'கபாலி' திரைப்படத்தில் ரஜினியின் மனைவி கேரக்டரான குமுதவல்லி கேரக்டரில் வாழ்ந்து காட்டிய ராதிகா ஆப்தேவுக்கு பெரும் வரவேற்பு கிடைத்தது. இதனை அடுத்து அவர் நிறைய தமிழ் படங்களில் நடிக்க வேண்டும் என்று ரசிகர்கள் தரப்பில் இருந்து வேண்டுகோள் விடுக்கப்பட்டது.
இந்நிலையில் அவர் தற்போது மீண்டும் ஒரு தமிழ் படத்தில் நடிக்கவுள்ளதாகவும், இந்த படம் பெண்களுக்கு முக்கியத்துவம் கொடுக்கும் படமாக இருக்கும் என்றும் கூறப்படுகிறது.
மிஷ்கின் நடித்து வரும் 'சவரக்கத்தி' படத்தை இயக்கி வரும் அறிமுக இயக்குனர் ஜி.ஆர்.ஆதித்யாவின் 2வது படத்தில்தான் ராதிகா ஆப்தே முக்கிய கேரக்டரில் நடிக்கவிருப்பதாக கூறப்படுகிறது.
தற்போது 'சவரக்கத்தி' போஸ்ட் புரடொக்ஷன்ஸ் பணியில் பிசியாக இருக்கும் ஜி.ஆர்.ஆதித்யா இதுகுறித்து கூறியபோது, 'என்னுடைய அடுத்த படத்திற்காக ராதிகா ஆப்தேவிடம் பேசியது உண்மைதான். என்னுடைய கதையை கேட்டதும் அவர் இம்ப்ரஸ் ஆகியுள்ளார். ஆனால் இன்னும் அவர் ஒப்பந்தம் செய்யப்படவில்லை. விரைவில் அவர் இந்த படத்திற்காக ஒப்பந்தம் செய்யப்படுவார். மேலும் என்னுடைய முதல் படத்தில் இருந்து இந்த படம் முற்றிலும் வித்தியாசமானதாக இருக்கும்' என்று கூறினார்.