close
Choose your channels

தனது திருமண வாழ்க்கை குறித்து வருத்தம் தெரிவித்த ராதிகா ஆப்தே

Friday, March 16, 2018 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

'கபாலி' நாயகி ராதிகா ஆப்தே தைரியமுள்ள நடிகைகளில் மிகச்சிலரில் ஒருவர் என்பதையும், சமீபத்தில் அவர் தன்னிடம் வாலாட்டிய ஒரு பிரபல நடிகரின் கன்னத்தில் அறைந்த சம்பவத்தை கூறினார் என்பதையும் ஏற்கனவே பார்த்தோம்

இந்த நிலையில் தனது குடும்ப வாழக்கை குறித்த ஒரு தகவலை அவர் தற்போது தெரிவித்துள்ளார். ராதிகா ஆப்தே தனது கணவரை ஒவ்வொரு முறை சந்திக்க செல்லும்போது ஏற்படும் செலவுகளையும் தங்களுடைய ஒவ்வொரு சந்திப்பும் உண்மையிலேயே ரொம்ப காஸ்ட்லியானது என்றும் தெரிவித்துள்ளார்

ராதிகா ஆப்தே பாலிவுட் படங்களில் நடித்து வருவதால் மும்பையிலும், அவரது கணவர் தொழில் காரணமாக லண்டனிலும் இருந்து வரும் நிலையில் தனது கணவரை சந்திக்க ராதிகா நேரம் கிடைக்கும்போது லண்டனுக்கு சென்று வருகிறார். மாதம் இரண்டு முறை அல்லது இரண்டு மாதங்களுக்கு மூன்று முறை என மும்பையில் இருந்து லண்டனுக்கு பயணம் செய்வதால் தங்களுடைய ஒவ்வொரு சந்திப்புக்கும் அதிக செலவாகிறது என்றும், அதுமட்டுமின்றி உலகின் இரண்டு மிக காஸ்ட்லியான நகரங்களில் இருவரும் வசிப்பதால் அதற்கான செலவும் அதிகம் உள்ளதாகவும் தெரிவித்துள்ளார். ஆனால் அதே நேரத்தில் குடும்பம், தொழில் இரண்டையும் பேலன்ஸ் செய்ய இதனை தவிர்க்க முடியாது என்றும் அவர் கூறியுள்ளார்.

 

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.   

Comments

Welcome to IndiaGlitz comments! Please keep conversations courteous and relevant to the topic. To ensure productive and respectful discussions, you may see comments from our Community Managers, marked with an "IndiaGlitz Staff" label. For more details, refer to our community guidelines.
settings
Login to post comment
Cancel
Comment