ஆஸ்திரேலிய வெற்றியின்போது வாஷிங்டன் சுந்தருக்கு இப்படியொரு சிக்கலா? அதிர்ச்சியில் ரசிகர்கள்!

ஆஸ்திரேலிய சுற்றுப்பயணம் மேற்கொண்ட இந்திய அணி பிரிஸ்பனில் நடைபெற்ற 4 ஆவது டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் அபார வெற்றியைப் பெற்றது. மேலும் இந்தப் போட்டியில் இளம் கிரிக்கெட் வீரர்களை கொண்ட இந்திய அணி 33 ஆண்டுகால வரலாற்று சாதனையை படைத்தது. அதனால் இந்த டீமை பார்த்து மிரண்டு போய்விட்டதாகப் பல கிரிக்கெட் ஜாம்பவான்களே கருத்து தெரிவித்து வருகின்றனர்.

இந்தப் போட்டியில் இளம் வீரர்கள் நடராஜ் தங்கராசு, வாஷிங்டன் சுந்தர் மற்றும் முகமது சிராஜ் நவ்தீப் சைனி, ஷர்துல் தாகூர் ஆகியோர் களம் இறக்கப்பட்டனர். அதில் நடராஜன் ஆட்டத்தின் துவக்கத்திலேய ஆஸ்திரேலிய விக்கெட்டுகளை வீழ்த்தி ரன் குவிப்பை தடுத்து நிறுத்தினார். இதனால் கேப்டன் ரஹானே வெற்றிக் கோப்பையை நடராஜன் கையில் கொடுத்து அழகு பார்த்ததும் நமக்குத் தெரியும்.

ஆனால் இந்தப் போட்டியில் ஆல்ரவுண்டர் ஜடேஜாவிற்கு பதிலாக களம் இறக்கப்பட்ட வாஷிங்டன் சுந்தருக்கு ஒரு வித்தியாசமான பிரச்சனையை சந்தித்து இருக்கிறார். இவர் அடிப்படையில் மிக உயரமான மனிதர். திடீரென 4 ஆவது டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் விளையாட வாய்ப்பு கிடைக்கப் பெற்றார். இந்நிலையில் விளையாட்டின் போது காலில் கட்டிக் கொள்ளும் ஒரு ஜோடி பேட் இல்லாமல் இவர் தவித்து இருக்கிறார்.

மற்ற வீரர்கள் அணியும் பேட் சுந்தருக்கு பத்தாது ஆகையால் போட்டி நேரத்தில் அவரது பயிற்சி குழுவும் கடும் பதற்றம் அடைந்து இருக்கிறது. இதனால் போட்டி நடைபெற இருந்த அன்று பயிற்சிக் குழுவை சேர்ந்த சிலர் ஆஸ்திரேலிய சாலைகளில் அலைந்து இவருக்கு பொருந்தும் வகையில் கால் பேடை தேடி அலைந்ததாகத் தற்போது தகவல் தெரிவித்து உள்ளனர். மேலும் சுந்தருக்கு ஏற்ற சைஸ் கிடைக்காமல் அவர்கள் பல கடைகள் ஏறி இறங்கியதாகவும் தெரிவித்து உள்ளனர்.

இதனால் கடைக்குச் சென்றவர்கள் திரும்பி வரும் வரை ஒட்டுமொத்த டீமும் பதற்றத்தில் இருந்ததாகவும் கூறியுள்ளனர். ஒருவழியாக சுந்தருக்கு ஏற்ற சைசில் ஒரு ஜோடி பேடைக் கண்டுபிடித்ததாக அந்தப் பயிற்சி குழு தெரிவித்து உள்ளது. இந்தத் தகவல் வெளியானதும் சுந்தருக்கு இப்படி ஒரு பிரச்சனையா என ரசிகர்கள் ஆச்சர்யம் அடைந்து உள்ளனர் என்பதும் குறிப்பிடத்தக்கது. 

More News

ஒரே நேரத்தில் 3 சாதனை… கமலா ஹாரிஸை பாராட்டி மகிழும் கின்னஸ் பக்கம்!

அமெரிக்காவின் 49 ஆவது துணை தலைவராக (அதிபராக) கமலா டி.ஹாரிஸ் பொறுப்பு ஏற்று இருக்கிறார்.

நீச்சல் குளத்தில் கவர்ச்சி காட்டும் பிக்பாஸ் நடிகை: குவியும் லைக்ஸ்கள்!

பிக் பாஸ் சீசன் 4 ஃபினாலே நிகழ்ச்சி சமீபத்தில் நடந்த நிலையில் அந்த நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினராக முந்தைய பிக்பாஸ் போட்டியாளர் ஷெரின் கலந்துகொண்டார் என்பதும்,

பேங்க் லாக்கருக்கே இந்த நிலமையா? அதிர்ச்சி சம்பவம்!

குஜராத் மாநிலத்தின் வதோரோ நகரில் உள்ள ஒரு பேங்க் லாக்கரில் அதன் பயனாளி ஒருவர் ரூ.2 லட்சத்து 20 ஆயிரம் பணத்தை பத்திரமாக வைத்து உள்ளார்.

மீண்டும் விஜய் டிவியில் பிக்பாஸ்: சுரேஷ் தாத்தா ரசிகர்களுக்கு கொண்டாட்டம்!

பிக்பாஸ் நிகழ்ச்சி கடந்த 100 நாட்களுக்கும் மேலாக நடைபெற்று வந்த நிலையில் கடந்த ஞாயிறு அன்று ஃபினாலே நிகழ்ச்சியுடன் இந்த நிகழ்ச்சி முடிவுக்கு வந்தது என்பது தெரிந்ததே

'ஆர்.ஆர்.ஆர்' படத்தின் ரகசியத்தை கசியவிட்ட நடிகை: சமூக வலைத்தளங்களில் பரபரப்பு!

பிரமாண்ட இயக்குனர் எஸ்எஸ் ராஜமவுலி இயக்கி வரும் 'ஆர்.ஆர்.ஆர்' என்ற திரைப்படத்தின் ரகசியத்தை பிரபல நடிகை ஒருவர் கசிய விட்ட நிலையில், படக்குழுவினர் கேட்டுக் கொண்டதை