close
Choose your channels

இன்று முத்துகுமாரிடம் ஒரு முக்கிய விஷயம் சொல்ல இருந்தேன். ஆர்.பார்த்திபன் வேதனை

Sunday, August 14, 2016 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

பிரபல பாடலாசிரியர் முத்துகுமாரின் மறைவிற்கு கோலிவுட் பிரபலங்கள் ஒவ்வொருவராக இரங்கல் தெரிவித்து வருகின்றனர். இந்நிலையில் நடிகர், இயக்குனர் பார்த்திபன் தனது சமூக வலைத்தளத்தில் இன்று அவரிடம் தனது படத்திற்கான பாடலின் சூழலை சொல்லி பாடல் எழுத சொல்ல வேண்டும் என்று நினைத்ததாகவும், ஆனால் அதற்குள் அவரது மறைவு செய்தி கேட்டு அதிர்ச்சியில் மெளனமாகியதாகவும் தெரிவித்துள்ளார்.
அவர் தனது சமூக வலைத்தளத்தில் கூறியிருப்பதாவது: சென்ற மாதம் ” எனக்கு எப்ப ட்யூன் அனுப்புறீங்க ? நான் எழுதுறேனில்லே உங்க படத்திலே?” என்று உரிமையாய் கேட்டார். இன்று அதிகாலை படப்பிடிப்பு முடிந்து படுக்க செல்கையில் உறங்கி எழுந்ததும் பாடலின் சூழலை அவரிடம் சொல்லி எழுத சொல்ல வேண்டும் என நினைத்தபடியே
Na. Muthukumar என்றிருந்த contact-ஐ திறந்து பார்த்த எனக்கு அதிர்ச்சி. அங்கு அவருடைய எண்ணே இல்லை. அதெப்படி? நாங்கள் தான் அடிக்கடி பேசுவோமே என்று குழம்பியபடி மீண்டும் தேடினேன்.
Kavingar na. Muthukumar என்ற contact-டில் அவர் எண் இருந்தது. தொடர்பு கொண்டேன்”not reachable” என்றது. சற்று நேரங்கழித்து முயல முடிவு செய்து வந்துள்ள what`s app செய்திகளை படித்தேன். நண்பர் சுரேஷ் சந்திரா அனுப்பிய மரணச் செய்தியில் மவுனித்தேன். நண்பனை இழந்த வருத்தத்தை பாதியாக குறைத்துக் கொள்ள காரணம். சாகாவரம் பெற்ற கவிஞனாக அவரின் எழுத்தும், வரிகளும், படைப்புகளும் நம்மிடம் இருப்பது' என்று பதிவு செய்துள்ளார்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.   

Comments

Welcome to IndiaGlitz comments! Please keep conversations courteous and relevant to the topic. To ensure productive and respectful discussions, you may see comments from our Community Managers, marked with an "IndiaGlitz Staff" label. For more details, refer to our community guidelines.
settings
Login to post comment
Cancel
Comment