பாலிவுட்டுக்கு செல்கிறது பிக்பாஸ் ஜோடிகளின் திரைப்படம்

  • IndiaGlitz, [Tuesday,March 27 2018]

 

கமல்ஹாசன் தொகுத்து வழங்கிய பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்ட அனைவருமே தற்போது திரையுலகில் நல்ல வாய்ப்புகளை பெற்று முன்னேறி வருகின்றனர். அந்த வகையில் பிக்பாஸ் நிகழ்ச்சி நடந்தபோதே நண்பர்களாக இருந்த ஹரிஷ் கல்யாண் மற்றும் ரைசா இணைந்து ஒரு படத்தில் நடித்து வருகின்றனர் என்பதும் அந்த படத்திற்கு 'பியார் பிரேமா காதல்' என்ற டைட்டில் வைக்கப்பட்டுள்ளது என்பதும் தெரிந்ததே

இந்த நிலையில் இந்த படத்தின் இளமையான திரைக்கதையை கேள்விப்பட்ட ஒரு பாலிவுட் தயாரிப்பாளர் இந்த படத்தின் இந்தி ரீமேக் உரிமையை பெற பேச்சுவார்த்தை நடத்தி வருகின்றாராம். இதுகுறித்த அதிகாரபூர்வமான தகவல் விரைவில் வெளிவரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

பாகுபலி 2' படத்தை வெளியிட்ட கே புரொடக்‌ஷ்ன்ஸ் ராஜராஜன் மற்றும் இசையமைப்பாளர் யுவ ன் ஷங்கர்ராஜாவின் YSR பிலிம்ஸ்( பி) லிட் இணைந்து தயாரிக்கும் இந்த படத்தை இளன் இயக்குகிறார். யுவன்ஷங்கர் ராஜா இசையில், ராஜா பட்டாச்சார்யா ஒளிப்பதிவில் இந்த படம் உருவாகி வருகிறது.

More News

சினேகனுடன் ஜோடி சேரும் ஓவியா! கட்டிப்பிடி வைத்தியம் இருக்குமா?

பிக்பாஸ் நிகழ்ச்சியின் மூலம் புகழின் உச்சத்துக்கு சென்றவர் ஓவியா. இந்த நிகழ்ச்சியின் மூலம் பல வருடங்கள் திரையுலகில் இருந்தவர்களுக்கு கிடைக்காத புகழ், ஓவியாவுக்கு கிடைத்தது என்பது குறிப்பிடத்தக்கது.

தளபதி விஜய்க்கு கிடைத்த 'மெர்சலான' வெற்றி

கோலிவுட் திரையுலகில் இருந்து ஒவ்வொரு ஆண்டும் 200க்கும் அதிகமான திரைப்படங்கள் வெற்றி பெற்ற போதிலும் ஒருசில படங்கள் மட்டுமே அனைத்து தரப்பினர்களையும் கவர்ந்து வெற்றிப்படமாகிறது.

தோனி என்னும் தலைவன்: சிறப்பு தொடர்

தல தோனி ஒரு சிறந்த விளையாட்டு வீரர் மட்டுமின்றி பல நல்ல பண்புகளை கொண்டு அனைவரும் மதிக்கும் வகையில் நடந்து கொண்டவர்.

முதல்வர் ஆனதும் முதல் கையெழுத்து எது தெரியுமா? கமல்ஹாசன்

உலக நாயகன் கமல்ஹாசன் சமீபத்தில் 'மக்கள் நீதி மய்யம்' என்ற அரசியல் கட்சியை தொடங்கி தற்போது அந்த கட்சிக்கு உறுப்பினர் சேர்க்கும் பணியில் தீவிரமாக உள்ளார்.

நேற்று ஸ்டாலின் பழமொழிகள், இன்று அமித்ஷா உளறல்கள்: நெட்டிசன்களுக்கு கொண்டாட்டம்

கடந்த இரண்டு நாட்களாக திமுக செயல் தலைவர் மு.க.ஸ்டாலின் 'யானை வரும் முன்னே மணியோசை வரும் பின்னே' என்றும் பூனை மேல் மதில் போல் என்றும் பழமொழிகளை மாற்றி சொன்னதால் நெட்டிசன்களின் கிண்டலுக்கு ஆளானார்.