'புஷ்பா' படத்தின் 'ஊ சொல்றியா' பாடலை பாடிய பாடகிக்கு விபத்து: மருத்துவமனையில் அனுமதி..!

  • IndiaGlitz, [Tuesday,March 19 2024]

‘புஷ்பா’ படத்தின் ‘ஊ சொல்றியா’ பாடலை பாடிய பாடகி விபத்தில் சிக்கியதை அடுத்து அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருவதாக தகவல் வெளியாகியுள்ளது.

தமிழ், தெலுங்கு, கன்னடம் என தென்னிந்திய மொழிகளில் பல பாடல்கள் பாடியவர் பாடகி மங்க்லி. ஆந்திராவைச் சேர்ந்த இவர் அட்லியின் ’ஜவான்’ திரைப்படத்தின் தமிழ்ப்பதிப்பில் ’வந்த இடம்’ என்ற பாடலை அனிருத்துடன் இணைந்து பாடி இருந்தார் என்பதும் விவேக் எழுதிய இந்த பாடல் சூப்பர் ஹிட் ஆகியது என்பது குறிப்பிடத்தக்கது. அதேபோல் புஷ்பா’ படத்தில் இடம்பெற்ற ‘ஊ சொல்றியா’ என்ற பாடலை கன்னட பதிப்பில் பாடியுள்ளார்.

இந்த நிலையில் பாடகி மங்கி ஆன்மீக விழா ஒன்றில் பாடல் பாடிவிட்டு காரில் ஹைதராபாத்துக்கு திரும்பிக் கொண்டிருந்தபோது பெங்களூரு தேசிய நெடுஞ்சாலையில் பின்னால் வந்த லாரி மோதியதால் அவரது கார் விபத்துக்கு உள்ளானது. இதில் பாடகி மங்க்லி மற்றும் அவருடன் வந்தவர்களுக்கு காயம் ஏற்பட்டதை அடுத்து அருகில் உள்ள மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு முதலுதவி சிகிச்சை பெற்றனர். இருப்பினும் பெரிய அளவில் காயம் இல்லை என்பதால் உடனே டிஸ்சார்ஜ் செய்யப்பட்டனர்.

இந்த நிலையில் இந்த விபத்து குறித்து காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை செய்து வருவதாகவும் விபத்தை ஏற்படுத்திவிட்டு நிற்காமல் சென்ற லாரியை தேடி வருவதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.

More News

மம்முட்டி, மோகன்லால் படங்கள் செய்யாத சாதனையை செய்த 'மஞ்சும்மெல் பாய்ஸ்'.. இதுதான் உண்மையான வெற்றி..!

மலையாள சூப்பர் ஸ்டார் நடிகர்களான மம்முட்டி, மோகன்லால் படங்கள் செய்யாத வசூல் சாதனையை ஒரு சின்ன பட்ஜெட் படம் செய்திருப்பதை பார்த்து மலையாள திரை உலக மட்டும் மட்டுமின்றி ஒட்டுமொத்த

இந்திக்கு செல்கிறதா 'அரண்மனை' திரைப்படம்.. சுந்தர் சி உடன் இணையும் பாலிவுட் பிரபலம்..!

தமிழ் திரையுலகின் முன்னணி கமர்ஷியல் இயக்குனரான சுந்தர் சி விரைவில் பாலிவுட்டில் ஒரு படம் இயக்க இருப்பதாகவும் இந்த படம் 'அரண்மனை' படத்தின் ஒரு பாகத்தின் ரிமேக் என்றும் கூறப்படுகிறது.

திருவனந்தபுரம் மைதானம் முழுவதும் சிஎஸ்கே போஸ்டர்கள்.. என்ன நடக்குது 'கோட்' படப்பிடிப்பில்?

தளபதி விஜய் நடித்து வரும் 'கோட்' படத்தின் படப்பிடிப்பு திருவனந்தபுரத்தில் நடைபெற்று வருவதாகவும் இந்த படப்பிடிப்பில் விஜய் உட்பட படக்குழுவினர் அனைவரும் கலந்து கொண்டு இருப்பதாகவும்

ரூ.2 கோடி மதிப்பில் பிரமாண்ட செட்.. இறுதிக்கட்டத்தை நெருங்கும் படப்பிடிப்பு.. ஜெயம் ரவி படத்தின் அப்டேட்..!

நடிகர் ஜெயம் ரவி தற்போது கமல்ஹாசன் உடன் 'தக்லைஃப்', எம் ராஜேஷ் இயக்கத்தில் உருவாகி வரும் 'பிரதர்' மற்றும் வேல்ஸ் பிலிம்ஸ் இன்டர்நேஷனல் நிறுவனத்தின் தயாரிப்பில் உருவாகி வரும் 'ஜெனி 'ஆகிய மூன்று

கேரளா சென்ற விஜய்க்கு நேர்ந்த விபரீதம்.. ரசிகர்களின் அன்புத்தொல்லையால் ஏற்பட்ட சேதம்..!

தளபதி விஜய் தற்போது வெங்கட் பிரபு இயக்கத்தில் உருவாகி வரும் 'கோட்' படத்தில் நடித்துக் கொண்டிருக்கும் நிலையில் இந்த படத்தின் அடுத்த கட்ட படப்பிடிப்பு திருவனந்தபுரத்தில் நடைபெற இருப்பதாகவும்