'சங்கு சக்கர கண்ணு', 'புஷ்பா' பாடகியின் முதல் தமிழ்ப்பாடல்: வீடியோ வைரல்

  • IndiaGlitz, [Saturday,December 10 2022]

'புஷ்பா’ படத்தில் இடம்பெற்ற சமந்தா பாடலை பாடிய பாடகி தற்போது முதன் முதலாக தமிழில் பாடி உள்ளதை அடுத்து அந்த பாடல் குறித்த வீடியோ இணையதளங்களில் வைரலாகி வருகிறது.

அல்லு அர்ஜுன் நடித்த ‘புஷ்பா’ திரைப்படம் கடந்த ஆண்டு வெளியாகி மிகப்பெரிய வரவேற்பை பெற்றது என்பது தெரிந்ததே. தமிழ் தெலுங்கு ஆகிய இரு மொழிகளில் உருவான இந்த படத்தில் தமிழில் இடம்பெற்ற ‘ஓ சொல்றியா மாமா.. ஓ ஓ சொல்றியா மாமா’ என்ற பாடலை நடிகை ஆண்ட்ரியா பாடிய நிலையில் இதே பாடலை தெலுங்கில் இந்திரவதி செளஹான் என்பவர் பாடியிருந்தார். இந்த பாடல் மிகப்பெரிய அளவில் பிரபலமானது என்பது குறிப்பிடத்தக்கது .

இந்த நிலையில் தெலுங்கில் பிரபலமான பாடகி இந்திரவதி செளஹான் முதன் முதலாக தமிழில் ஒரு திரைப்படத்தில் பாடியுள்ள நிலையில் அதுகுறித்த வீடியோ வைரலாகி வருகிறது. தமிழில் உருவாகி வரும் ‘எஞ்ஜாய்’ என்ற படத்தில் இடம்பெற்ற ’சங்கு சக்கர கண்ணு’ என்ற பாடலை இவர் பாடியுள்ளார் என்பதும் இந்த பாடலின் வீடியோ இணையதளங்களில் வைரலாக வருகிறது.

இந்த படத்திற்கு இம்ரான் என்பவர் இசையமைத்துள்ளார். இந்த பாடலை விவேகா எழுதியுள்ளார். ‘எஞ்ஜாய்’ படத்தில் மதன் குமார், விக்னேஷ் ஹரிஷ் குமார் உள்ளிட்டோர் நடித்துள்ளனர் என்பதும் இந்த படத்தை பெருமாள் காசி என்பவர் இயக்கியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.