தேசிய விருது பெற்ற கையோடு சுறுசுறுப்பாகும் 'புஷ்பா 2' குழுவினர்.. படப்பிடிப்பில் ராஷ்மிகா..!

  • IndiaGlitz, [Saturday,August 26 2023]

அல்லு அர்ஜுன், ராஷ்மிகா மந்தனா நடித்த ’புஷ்பா’ திரைப்படம் கடந்த 2021 ஆம் ஆண்டு வெளியான நிலையில் இந்த படம் மிகப்பெரிய வெற்றி பெற்றது என்பது தெரிந்ததே. இதனை அடுத்து இந்த படத்தின் இரண்டாம் பாகம் தற்போது உருவாகி வருகிறது என்பதும் விறுவிறுப்பான படப்பிடிப்பு நடைபெற்று வருகிறது என்பதும் குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில் ’புஷ்பா’ திரைப்படத்திற்காக சிறந்த நடிகர் என்ற விருது அந்த படத்தில் நடித்த அல்லு அர்ஜுனுக்கும், சிறந்த இசையமைப்பாளர் என்ற விருது தேவிஸ்ரீ பிரசாத் அவர்களுக்கும் கிடைத்தது. விருது கிடைத்த மகிழ்ச்சியோடு தற்போது அடுத்த கட்ட படப்பை படப்பிடிப்பை ’புஷ்பா 2’ குழுவினர் தொடங்கியுள்ளனர்.

இதுவரை 50 சதவீதம் படப்பிடிப்பு முடிவடைந்து உள்ளதாகவும், அடுத்தகட்ட படப்பிடிப்பு தற்போது நடைபெற்று வருவதாகவும் அதில் அல்லு அர்ஜுன் மற்றும் ராஷ்மிகா மந்தனா கலந்து கொண்டு இருப்பதாகவும் கூறப்படுகிறது.

மேலும் தேசிய விருது பெற்ற மகிழ்ச்சியில் இருக்கும் தேவிஸ்ரீ பிரசாத் கம்போஸ் செய்துள்ள சிங்கிள் பாடலையும் விரைவில் வெளியிட படக்குழுவினர் திட்டமிட்டுள்ளனர். இந்த படத்தை அடுத்த ஆண்டு மார்ச் மாதம் வெளியிட படக்குழுவினர் முடிவு செய்திருப்பதாகவும் இது குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாகும் என்றும் கூறப்படுகிறது.

அல்லு அர்ஜுன், ராஷ்மிகா மந்தனா, பகத் பாசில், ஜெகபதி பாபு, பிரகாஷ் ராஜ், சுனில் நடித்த இந்த படத்தை சுகுமார் இயக்கி வருகிறார் என்பதும் மைத்ரி மூவி மேக்கர்ஸ் இந்த படத்தை சுமார் ரூ.500 கோடி பட்ஜெட்டில் தயாரித்து வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.

More News

'ஜெய்பீம்' படத்திற்கு விருது இல்லையா? கொதித்து எழுந்த திரையுலகினர்..!

69 வது தேசிய விருது சமீபத்தில் அறிவிக்கப்பட்ட நிலையில் 'ஜெய்பீம்' 'சார்பாட்டா பரம்பரை' மற்றும் 'கர்ணன்' ஆகிய திரைப்படங்களுக்கு விருது கிடைக்கும் என்று எதிர்பார்க்கப்பட்டது.

விஜய் டிவிக்கு வந்த நடிகர் அப்பாஸ்.. அடுத்தடுத்து வாய்ப்புகள் கிடைக்குமா?

தமிழ் திரை உலகில் சாக்லேட் பாய் என்று அழைக்கப்பட்டவர் நடிகர் அப்பாஸ் என்பதும் அவருக்கு 1990களில் ஏராளமான பெண் ரசிகைகள் இருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.

படம் டிராப்.. வேறு தயாரிப்பு நிறுவனம்.. 'விடாமுயற்சி' வதந்திகளுக்கு முற்றுப்புள்ளி வைத்த சுபாஷ்கரன்..!

அஜித் நடிப்பில், மகிழ் திருமேனி இயக்கத்தில், லைகா நிறுவனத்தின் தயாரிப்பில் உருவாக இருக்கும் 'விடாமுயற்சி' படத்தின் அறிவிப்பு கடந்த சில மாதங்களுக்கு முன்னர் வெளியானது. ஆனால் இந்த படத்தின் மற்ற

ரூ.500 கோடிக்கு புள்ளி வைத்த 'பொன்னியின் செல்வன்'.. கோலம் போடும் மாஸ் நடிகர்களின் படங்கள்..!

தெலுங்கு திரை உலகில் 'பாகுபலி', 'பாகுபலி 2'  மற்றும் 'ஆர்.ஆர்.ஆர்', கன்னடத் திரையுலகில்  'காந்தாரா' பாலிவுட்டில் 'பதான்' ஆகிய திரைப்படங்கள் 500 கோடி  ரூபாய் முதல் 1000 கோடி ரூபாய் வரை வசூல்

ஒரு கையில் சரக்கு.. இன்னொரு கையில் கிளாஸ்.. செம்ம வீடியோவை வெளியிட்ட கிரண்..!.

ஒரு கையில் சரக்கு, இன்னொரு கையில் கிளாஸ் வைத்துக் கொண்டு நடிகை கிரண் செம நடனமாடிய வீடியோவை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டுள்ள நிலையில் அந்த வீடியோவுக்கு ஆயிரக்கணக்கான லைக் கிடைத்துள்ளது.