பெற்றோரையும் டீச்சரையும் கைது செய்யுங்கள்: ஊரடங்கு நேரத்தில் சிறுவன் கொடுத்த புகார்

  • IndiaGlitz, [Saturday,May 02 2020]

நாடு முழுவதும் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்ட நேரத்தில் தன்னை தன்னுடைய பெற்றோரும் ஆசிரியரும் டியூஷன் போக சொல்லி கட்டாயப்படுத்தியதாக 5 வயது சிறுவன் ஒருவன் போலீசில் புகார் கொடுத்ததால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது

ஊரடங்கு நேரத்தில் அனைவரும் வீட்டில் இருக்கும் நிலையில் தன்னை மட்டும் டியூஷனுக்கு செல்ல பெற்றோர்கள் கட்டாயப்படுத்துவதாகவும், ஆசிரியரும் டியூஷனுக்கு வரவேண்டும் என்று கட்டாயப்படுத்துவதாகவும் எனவே அவர்களை கைது செய்யுமாறு கோரி 5 வயது சிறுவன் காவல் துறையினரிடம் புகார் கொடுத்த சம்பவம் பஞ்சாப் மாநிலம் பட்டாவா என்ற பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

இதனையடுத்து 5 வயது சிறுவனின் புகாரை ஏற்றுக்கொண்ட காவல்துறை அதிகாரிகள் உடனடியாக ஆசிரியர் வீட்டுக்கு சென்று ஊரடங்கு நேரத்தில் டியூஷனுக்கு வரும்படி சிறுவனை கட்டாயப்படுத்த கூடாது என்று அறிவுறுத்தினர். அதன்பின்னர் அந்த சிறுவனை அழைத்துக் கொண்டு அவரது வீட்டுக்குச் சென்ற போலீசார் பெற்றோரிடமும் டியூசனுக்கு அனுப்ப கூடாது என்றும் சிறுவனை வீட்டிலேயே இருக்க வைக்க வேண்டும் என்றும் அறிவுறுத்தி சிறுவனை வீட்டில் விட்டுச் சென்றனர். பெற்றோர் மற்றும் ஆசிரியர் மீது 5 வயது சிறுவன் கொடுத்த புகாரால் பஞ்சாப்பில் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.