நண்பன், எந்திரன் படங்களுடன் கனெக்ஷன் ஆன 'புலி'

  • IndiaGlitz, [Wednesday,September 23 2015]

இளையதளபதி விஜய் நடித்த 'புலி' திரைப்படம் வரும் அக்டோபர் 1ஆம் தேதி பிரமாண்டமாக ரிலீஸ் ஆகவுள்ளது. உலகின் முக்கிய நாடுகளான அமெரிக்கா, கனடா, பிரான்ஸ், ஜெர்மனி, சுவிட்சர்லாந்து உள்பட பல நாடுகளில் இந்த படம் பெருவாரியான திரையரங்குகளில் ரிலீசாகவுள்ளதை ஏற்கனவே பார்த்தோம். இந்நிலையில் இந்த படத்தின் சிங்கப்பூர் நாட்டின் ரிலீஸ் உரிமையை பிரபல நிறுவனமான 'சுவாரா நெட்வொர்க்ஸ்' (Suara Networks) நிறுவனம் பெற்றுள்ளதாக செய்திகள் வெளிவதுள்ளது.

இந்த நிறுவனம் ஏற்கனவே சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடித்த 'எந்திரன்' மற்றும் விஜய் நடித்த 'நண்பன்' ஆகிய திரைப்படங்களை சிங்கப்பூரில் ரிலீஸ் செய்த நிறுவனம் என்பது குறிப்பிடத்தக்கது. சிங்கப்பூரில் தமிழர்கள் அதிகம் வாழும் நாடு என்பதால் அந்நாட்டில் 'புலி' திரைப்படத்திற்கு மாபெரும் வரவேற்பு இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. எனவே சிங்கப்பூரில் அதிகளவிலான திரையரங்குகளில் ரிலீஸ் செய்ய சுவாரா நிறுவனம் தீவிர முயற்சியில் ஈடுபட்டு வருகிறது.

இந்நிலையில் 'புலி' திரைப்படம் குறித்து தனது சமூக வலைத்தளத்தில் கருத்து கூறியுள்ள இயக்குனர் சிம்புதேவன், விஜய் ரசிகர்கள் மட்டுமின்றி அனைத்து தரப்பினர்களும், அனைத்து வயதினர்களும் ரசிக்கும்படி இந்த படம் இருக்கும் என்பதை என்னால் உறுதியாக கூற முடியும் என்று கூறியுள்ளார். மேலும் 'புலி' படத்தையும் 'பாகுபலி' படத்தையும் ஒப்பிட வேண்டாம் என்றும் இரண்டும் வெவ்வேறு கதைக்களங்கள் கொண்டவை என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

More News

திருச்செந்தூர் முருகன் கோவிலில் ஹன்சிகா

பிரபல நடிகை ஹன்சிகா நடிப்பில் மட்டுமின்றி சமூக சேவை மற்றும் பக்தியிலும் ஈடுபாடு உள்ளவர் என்பது அனைவரும் அறிந்ததே...

அஜீத்-விஜய்யுடன் நடித்த அனுபவங்கள் - ஸ்ரீதேவி

இளையதளபதி விஜய் நடித்த 'புலி' படத்தில் விஜய்க்கு அடுத்தபடியாக முக்கியத்துவம் உள்ள கேரக்டரில் நடித்துள்ளவர் ஸ்ரீதேவி...

விரைவில் 'புலி' படத்தின் 2வது டிரைலர்

இளையதளபதி விஜய் நடித்த 'புலி' திரைப்படத்தின் டிரைலர் கடந்த மாதம் வெளியாகி இந்திய அளவில் அதிக லைக்குகள் பெற்ற டிரைலர் என்பது மட்டுமின்றி பல சாதனைகளை புரிந்தது...

சிவகார்த்திகேயனை நெகிழ வைத்த ரஜினியின் அழைப்பு

கடந்த ஞாயிறு அன்று திருச்செந்தூரில் நடைபெற்ற ஒரு விழாவிற்காக மதுரை சென்ற நடிகர் சிவகார்த்திகேயனை...

சமூக வலைத்தளத்தில் இருந்து சிம்பு திடீர் விலகல். காரணம் என்ன?

நடிகர் சிம்பு தனது ரசிகர்களுக்கு பெரும் இடைவெளியில் படங்கள் கொடுத்து கொண்டிருந்தாலும், சமூக வலைத்தளங்கள் மூலம் அவ்வபோது தனது ரசிகர்களுடன் தொடர்பில் இருப்பவர்...