நிதியுதவி செய்த விஜய்க்கு நன்றி தெரிவித்த முதல்வர்: 

  • IndiaGlitz, [Thursday,April 23 2020]

கடந்த சில வாரங்களாக கொரோனா வைரசுக்கு எதிராக மத்திய மாநில அரசுகள் போராடி வரும் நிலையில் அரசுக்கு உதவும் வகையில் பணக்காரர்கள், தொழிலதிபர்கள், திரையுலகைச் சேர்ந்தவர்கள் பலர் நிதி உதவி செய்து வருகின்றனர் என்பது தெரிந்ததே

இந்த நிலையில் தளபதி விஜய் அவர்கள் நேற்று ரூ.1.3 கோடி நிதியுதவி குறித்த அறிவிப்பை தெரிவித்தார் என்றும், அதில் அவர் புதுவை மாநிலத்துக்கு ரூபாய் 5 லட்சம் நிதி உதவி செய்வதாக அறிவித்து இருந்தார் என்ற செய்தியையும் ஏற்கனவே பார்த்தோம்

இந்த நிலையில் தங்களது மாநிலத்துக்கு நிதி உதவி செய்த நடிகர் விஜய்க்கு புதுவை முதல்வர் நாராயணசாமி அவர்கள் நன்றி தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் வீடியோ ஒன்றில் கூறியபோது ’நடிகர் விஜய் புதுச்சேரிக்கு 5 லட்ச ரூபாய் நிதியுதவி வழங்கி உள்ளார். அவருடைய தாராளமான மனதை பாராட்டுகிறேன். அவருக்கு நன்றி தெரிவித்து கொள்கிறேன். இதேபோன்று மற்ற நடிகர் நடிகைகளும் புதுச்சேரி மாநில மக்களுக்கு உதவ வேண்டும் என்று அவர் கேட்டுக்கொண்டார். இந்த வீடியோ தற்போது விஜய் ரசிகர்களால் வைரலாக்கப்பட்டு வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது

More News

உண்மையில் ஹைட்ராக்ஸிகுளோரோகுயின் கொரோனாவை குணப்படுத்துகிறதா???  ஆய்வு முடிவு!!!

அமெரிக்க அதிபர்  டெனால்ட் ட்ரம்ப் கொரோனா வைரஸ் சிகிச்சைக்கு ஹைட்ராக்ஸிகுளோரோகுயின் மருந்தை இறக்குமதி செய்ததில் இருந்து உலகம் முழுக்க இந்த மருந்து பேசுபொருளாகவே மாறிவிட்டது.

உலகம் முழுவதும் இறைச்சி சந்தைகளுக்கு புதிய விதிமுறைகள்!!! WHO வலியுறுத்தல்!!!

கொரோனா வைரஸ் பரவலைத் தொடர்ந்து உலக நாடுகள் கடும் பாதிப்பைச் சந்தித்து வருகின்றன.

ஒரே ஒரு பாடலுக்காக கமலுடன் இணைந்த ஒட்டுமொத்த இசையுலகம்

கொரோனாவால் அமல்படுத்தப்பட்டுள்ள ஊரடங்கு காரணமாக மக்கள் படும் துன்பம், இந்த நேரத்தில் மனிதர்கள் சக மனிதர்களிடம் காட்ட வேண்டிய மனிதநேயம் ஆகியவை

பள்ளியில் தனிமைப்படுத்தப்பட்ட வெளிமாநில தொழிலாளர்களின் நன்றிக்கடன்!

ராஜஸ்தான் மாநிலத்தில் ஊரடங்கு உத்தரவு காரணமாக தங்கள் சொந்த ஊர் திரும்ப முடியாமல் பள்ளியில் தனிமைப்படுத்தப்பட்ட 54வது தொழிலாளர்கள் அந்த பள்ளிக்கு செய்த சேவையை பார்த்து அந்த பகுதி மக்கள்

உலக அளவில் 26 லட்சத்தை தாண்டிய கொரோனா பாதிப்பு!

உலக அளவில் கொரோனா பாதிப்பு நிலவரம் குறித்த தகவல் சற்றுமுன் வெளியாகியுள்ள நிலையில் உலகம் முழுவதும் கொரோனாவால் பாதிப்பு அடைந்தவர்களின் எண்ணிக்கை 26,38,024ஆக உயர்ந்துள்ளது.