5 ஆண்டுகளாக பாலியல் தொந்தரவா? ஆசிரியர் ராஜகோபாலன் வாக்குமூலத்தில் திடுக்கிடும் தகவல்!

  • IndiaGlitz, [Monday,May 24 2021]

சென்னை பத்மா சேஷாத்திரி பள்ளியில் ராஜகோபாலன் என்ற ஆசிரியர் மாணவிகளை பாலியல் தொந்தரவு செய்ததாக எழுந்த புகாரை அடுத்து காவல்துறையினர் இன்று அவரிடம் விசாரணை செய்து கொண்டு வருகின்றனர். இந்த நிலையில் தற்போது வெளியாகியுள்ள தகவலின்படி ராஜகோபாலன் அளித்த வாக்குமூலத்தில் அவர் கடந்த 5 ஆண்டுகளாக 11 மற்றும் 12ஆம் வகுப்பு மாணவிகளிடம் பாலியல் தொந்தரவு ஈடுபட்டுள்ளது அம்பலமாகியுள்ளது.

மாணவிகளிடம் வாட்ஸ்அப் மூலம் சேட் செய்து பாலியல் தொந்தரவு கொடுத்ததாக அவர் வாக்குமூலம் அளித்து இருப்பது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. மேலும் பாலியல் புகார் விவகாரம் வெளிச்சத்துக்கு வந்ததும் தனது செல்போனில் உள்ள மாணவிகளின் புகைப்படங்களை டெலிட் செய்துள்ளதாகவும் போலீஸ் தரப்பில் கூறப்படுகிறது.


அதுமட்டுமின்றி அதே பள்ளியில் தன்னைப் போன்ற சில ஆசிரியர்கள் இதேபோல் பாலியல் தொந்தரவில் ஈடுபட்டிருப்பதாக ராஜகோபாலன் தெரிவித்துள்ளதை அடுத்து இந்த விவகாரம் மேலும் விஸ்வரூபம் எடுக்கும் என்று கூறப்படுகிறது. முன்னதாக பாலியல் புகாருக்கு உள்ளான ஆசிரியர் ராஜகோபாலன் சஸ்பெண்ட் செய்யப்பட்டார் என்பதும் அவர் மீது கல்வித்துறை மற்றும் காவல்துறை தற்போது நடவடிக்கை எடுத்து வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

More News

வானத்தில் படு விமர்சையாக நடந்த திருமணம்? பிறகு நடந்தது என்ன தெரியுமா?

கொரோனா பரவல் காரணமாகத் தமிழகத்தில் இன்றுமுதல் தளர்வுகளற்ற ஊரடங்கு அமல்படுத்தப்பட்டு உள்ளது.

கேரள சட்டப்பேரவையில் ஒலித்த தமிழ்....! ஏன் தெரியுமா..!

கேரள சட்டமன்றத்தில், சட்டமன்ற உறுப்பினர் ஒருவர் தமிழில் எம்எல்ஏ-வாக பதவியேற்றது ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது

நடிகை நிக்கி கல்ராணியின் உடைகள் எங்கு போகிறது தெரியுமா? வீடியோ வைரல்!

தமிழகம் உள்பட இந்தியா முழுவதும் கொரோனா வைரஸ் பாதிப்பு காரணமாக ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளதை அடுத்து ஏழை எளிய மக்கள் அத்தியாவசிய பொருட்கள் கூட கிடைக்காமல்

அந்த படத்தை நினைத்தாலே எனக்கு அழுகை வருகிறது: 'வலிமை' தயாரிப்பாளர் போனிகபூர் வருத்தம்

அந்த படத்தை நினைத்தாலே எனக்கு அழுகை வருகிறது என அஜீத் நடித்து வரும் 'வலிமை' படத்தின் தயாரிப்பாளர் போனி கபூர் தெரிவித்துள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது 

இவர் தான் நடிகை சினேகாவின் சகோதர்களா? ஆச்சரியத்தில் ரசிகர்கள்!

இன்று உலகம் முழுவதும் சகோதரர்கள் தினம் கொண்டாடப்பட்டு வருகிறது என்பதையும் தமிழ் திரையுலக பிரபலங்கள் உள்பட இந்திய திரை உலக பிரபலங்கள் பலர் தங்களுடைய சகோதரர்களின்