close
Choose your channels

தஞ்சைக்கு வரவில்லை என்றாலும் பக்கத்து ஊருக்கு வர்றாங்களே.. 'PS 2' படத்தின் இறுதிக்கட்ட  புரமோஷன் .. !

Wednesday, April 26, 2023 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

மணிரத்னம் இயக்கத்தில் லைகா நிறுவனத்தின் சுபாஷ்கரன் அவர்களின் பிரம்மாண்டமான தயாரிப்பில் உருவான ’பொன்னியின் செல்வன்’ திரைப்படத்தின் இரண்டாம் பாகம் நாளை மறுநாள் உலகம் முழுவதும் தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம் மற்றும் ஹிந்தி என ஐந்து மொழிகளில் வெளியாக உள்ளது.

இந்த படத்திற்கு ஏற்கனவே மிகப்பெரிய எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ள நிலையில் படக்குழுவினர் தமிழகம் மட்டுமின்றி இந்தியாவின் முக்கிய நகரங்களுக்கு சென்று புரமோஷன் செய்து வருகின்றனர் என்பதை பார்த்து வருகிறோம்.

இந்த நிலையில் தமிழகத்தில் ஏற்கனவே சென்னை, கோவை ஆகிய நகரங்களில் புரமோஷன் செய்த ’பொன்னியின் செல்வன்’ படக்குழுவினர் இன்று திருச்சியில் புரமோஷன் செய்வதற்காக வருகை தந்துள்ளனர்.

சோழர்களின் தலைநகரான தஞ்சையில் ’பொன்னின் செல்வன்’ படக்குழுவினர் வருகை தர வேண்டும் என முதல் பாகம் வெளியான போதே ரசிகர்களால் கோரிக்கை விடப்பட்டது. இந்த நிலையில் தஞ்சைக்கு வராவிட்டாலும் தஞ்சைக்கு அருகில் உள்ள திருச்சிக்கு படக்குழுவினர் வருகை தந்திருப்பது தங்களுக்கு மகிழ்ச்சியாக உள்ளது என ரசிகர்கள் தெரிவித்துள்ளனர்.

திருச்சிக்கு விமானத்தில் வந்த மணிரத்னம், விக்ரம், கார்த்தி, ஜெயம் ரவி, ஐஸ்வர்யா ராய், த்ரிஷா, ஐஸ்வர்யா லட்சுமி ஆகியோர்களின் புகைப்படங்களை மெட்ராஸ் டாக்கீஸ் நிறுவனம் தனது சமூக வலைதள பக்கத்தில் பதிவு செய்துள்ள நிலையில் அந்த புகைப்படங்கள் தற்போது வைரல் ஆகி வருகின்றன.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.   

Comments

Welcome to IndiaGlitz comments! Please keep conversations courteous and relevant to the topic. To ensure productive and respectful discussions, you may see comments from our Community Managers, marked with an "IndiaGlitz Staff" label. For more details, refer to our community guidelines.
settings
Login to post comment
Cancel
Comment