தஞ்சைக்கு வரவில்லை என்றாலும் பக்கத்து ஊருக்கு வர்றாங்களே.. 'PS 2' படத்தின் இறுதிக்கட்ட  புரமோஷன் .. !

  • IndiaGlitz, [Wednesday,April 26 2023]

மணிரத்னம் இயக்கத்தில் லைகா நிறுவனத்தின் சுபாஷ்கரன் அவர்களின் பிரம்மாண்டமான தயாரிப்பில் உருவான ’பொன்னியின் செல்வன்’ திரைப்படத்தின் இரண்டாம் பாகம் நாளை மறுநாள் உலகம் முழுவதும் தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம் மற்றும் ஹிந்தி என ஐந்து மொழிகளில் வெளியாக உள்ளது.

இந்த படத்திற்கு ஏற்கனவே மிகப்பெரிய எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ள நிலையில் படக்குழுவினர் தமிழகம் மட்டுமின்றி இந்தியாவின் முக்கிய நகரங்களுக்கு சென்று புரமோஷன் செய்து வருகின்றனர் என்பதை பார்த்து வருகிறோம்.

இந்த நிலையில் தமிழகத்தில் ஏற்கனவே சென்னை, கோவை ஆகிய நகரங்களில் புரமோஷன் செய்த ’பொன்னியின் செல்வன்’ படக்குழுவினர் இன்று திருச்சியில் புரமோஷன் செய்வதற்காக வருகை தந்துள்ளனர்.

சோழர்களின் தலைநகரான தஞ்சையில் ’பொன்னின் செல்வன்’ படக்குழுவினர் வருகை தர வேண்டும் என முதல் பாகம் வெளியான போதே ரசிகர்களால் கோரிக்கை விடப்பட்டது. இந்த நிலையில் தஞ்சைக்கு வராவிட்டாலும் தஞ்சைக்கு அருகில் உள்ள திருச்சிக்கு படக்குழுவினர் வருகை தந்திருப்பது தங்களுக்கு மகிழ்ச்சியாக உள்ளது என ரசிகர்கள் தெரிவித்துள்ளனர்.

திருச்சிக்கு விமானத்தில் வந்த மணிரத்னம், விக்ரம், கார்த்தி, ஜெயம் ரவி, ஐஸ்வர்யா ராய், த்ரிஷா, ஐஸ்வர்யா லட்சுமி ஆகியோர்களின் புகைப்படங்களை மெட்ராஸ் டாக்கீஸ் நிறுவனம் தனது சமூக வலைதள பக்கத்தில் பதிவு செய்துள்ள நிலையில் அந்த புகைப்படங்கள் தற்போது வைரல் ஆகி வருகின்றன.

More News

கனவுக்கன்னியாக இருந்த சமீரா ரெட்டியா இவர்? லேட்டஸ்ட் வீடியோ வைரல்..!

நடிகை சமீரா ரெட்டி தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் லேட்டஸ்ட் புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை பதிவு செய்த நிலையில் கடந்த சில ஆண்டுகளுக்கு முன் கனவு கன்னியாக இருந்தவரா இவர்?

ராம் இயக்கத்தில்  'ஏழு கடல் ஏழு மலை': சூப்பர் அப்டேட் கொடுத்த நடிகர் சூரி..!

 பிரபல இயக்குனர் ராம் இயக்கத்தில் உருவாகி வரும் 'ஏழு கடல் ஏழு மலை' என்ற படத்தின் சூப்பர் அப்டேட்டை நடிகர் சூரி தனது இன்ஸ்டாகிராமில் பதிவு செய்துள்ளதை அடுத்து அது குறித்த வீடியோ இணையதளங்களில்

திடீரென ஆன்மீக பயணம் மேற்கொண்ட ரம்யா பாண்டியன்.. யாருடன் கிரிவலம் சென்றார் தெரியுமா?

சமூக வலைதளங்களில் கிளாமர் புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை பதிவு செய்து பரபரப்பை ஏற்படுத்தி வரும் நடிகை ரம்யா பாண்டியன் திடீரென தனது சகோதரிகளுடன் ஆன்மீக பயணம் சென்றுள்ள

'கட்டா குஸ்தி 2' எப்போது? நடிகை ஐஸ்வர்யா லட்சுமி பதில்..!

விஷ்ணு விஷால், ஐஸ்வர்யா லட்சுமி நடித்த 'கட்டா குஸ்தி' என்ற திரைப்படம் கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்ற நிலையில் இந்த படத்தின் இரண்டாம் பாகம் எப்போது

சிங்கப்பூரில் தமிழருக்கு மரண தண்டனை நிறைவேற்றம்.. மனித உரிமை ஆர்வலர்கள் கடும் கண்டனம்..!

கஞ்சா கடத்தல் வழக்கில் தமிழருக்கு சிங்கப்பூரில் மரண தண்டனை நிறைவேற்றப்பட்டுள்ளதை அடுத்து மனித உரிமை ஆர்வலர்கள் கடும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர்.