close
Choose your channels

ரஜினியின் போயஸ் கார்டன் இல்லம் திடீர் முற்றுகை: பெரும் பரபரப்பு

Thursday, May 31, 2018 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் அவர்கள் நேற்று தூத்துகுடிக்கு சென்று அந்த பகுதி மக்களுக்கு ஆறுதல் கூறிய பின்னர் போராட்டம் குறித்து கூறிய கருத்து பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது. இந்த நிலையில் ரஜினியின் வீடு முற்றுகையிடப்படவுள்ளதாக செய்தி வெளிவந்ததை அடுத்து இன்று காலை அவருடைய வீட்டிற்கு கூடுதல் போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டது.

இந்த நிலையில் இன்று மாலை போயஸ் கார்டன் அருகே உள்ள ரஜினிகாந்த் வீட்டை தமிழக மக்கள் ஜனநாயக கட்சியை சேர்ந்தவர்கள் முற்றுகையிட முயன்றனர். அவர்கள் ரஜினி வீட்டை நோக்கி வந்து கொண்டிருந்தபோது திடீரென ராதாகிருஷ்ணன் சாலையில் டிடிகே சாலை அருகில் போராட்டத்தில் ஈடுபட்டனர். மேலும் திடீரென அவர்கள் சாலைமறியல் போராட்டத்தில் ஈடுபட்டதால் அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.

இந்த நிலையில் போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் கொடிகளை ஏந்தியவாறு ரஜினிக்கு எதிராக முழக்கங்களை எழுப்பினர். போலீசார் அவர்களை கலைந்து செல்லும்படி கூறியும் அவர்கள் தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டதால் பின்னர் போலீசார் அவரக்ளை கைது செய்து அழைத்துச் சென்றனர். இந்த சம்பவத்தால் அந்த பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.   

Comments

Welcome to IndiaGlitz comments! Please keep conversations courteous and relevant to the topic. To ensure productive and respectful discussions, you may see comments from our Community Managers, marked with an "IndiaGlitz Staff" label. For more details, refer to our community guidelines.
settings
Login to post comment
Cancel
Comment