விரல் இல்லாத துண்டான கை.. 'கோட்' நடிகர் வெளியிட்ட அதிர்ச்சி புகைப்படம்..!

  • IndiaGlitz, [Sunday,February 11 2024]

‘கோட்’ படத்தில் நடித்து வரும் நடிகர் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ஒரு விரல் இல்லாத துண்டான கையின் புகைப்படத்தை பதிவு செய்துள்ள நிலையில் இந்த புகைப்படம் பரபரப்பாக இணையத்தில் வைரல் ஆகி வருகிறது.

தளபதி விஜய் நடிப்பில், வெங்கட் பிரபு இயக்கத்தில், யுவன் சங்கர் ராஜா இசையில், ஏஜிஎஸ் நிறுவனத்தின் தயாரிப்பில் உருவாகி வரும் திரைப்படம் ‘கோட்’. இந்த படத்தின் படப்பிடிப்பு 50 சதவீதத்திற்கு மேல் முடிந்துவிட்ட நிலையில் அடுத்த கட்ட படப்பிடிப்பு இலங்கையில் நடைபெற இருப்பதாக கூறப்படுகிறது.

இந்த நிலையில் ‘கோட்’ படத்தில் ஒரு முக்கிய கேரக்டரில் நடித்து வரும் நடிகர் ஸ்ரீராம் என்பவர் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ஒரு விரல் இல்லாத கையின் புகைப்படம் ஒன்றை பதிவு செய்துள்ளார். செயற்கையாக செய்யப்பட்ட இந்த கை ‘கோட்’ படத்தில் பயன்படுத்தப்பட உள்ளதாகவும் இந்த படத்தில் நடைபெறும் போர் காட்சி ஒன்றில் விஜய்யின் கை விரல் துண்டாவது மட்டுமின்றி ஒரு கையே துண்டாவது போன்ற காட்சி இருக்கலாம் என்றும் இந்த புகைப்படத்தில் இருந்து ரசிகர்கள் யூகித்து வருகின்றனர். இது எந்த அளவுக்கு உண்மை என்பது ‘கோட்’ படத்தை பார்த்த பிறகு தான் தெரிய வரும்.

இருப்பினும் இந்த கையின் புகைப்படத்தை தனது இன்ஸ்டாகிராமில் வெளியிட்டு அதில் ‘கோட்’ என்ற ஹேஷ்டேக்கையும் நடிகர் ஸ்ரீராம் பதிவு செய்திருப்பதை பார்க்குபோது இந்த செயற்கை கை ‘கோட்’ படத்தில் தான் பயன்படுத்தப்பட உள்ளது என்பது கிட்டத்தட்ட உறுதி செய்யப்பட்டுள்ளது.

More News

எம் ராஜேஷ் இயக்கிய படம் எதுவுமே காமெடி படம் இல்லை, நாம தான் தப்பா புரிஞ்சிகிட்டோம்: ஜெயம் ரவி

நடிகர் ஜெயம் ரவி சமீபத்தில் அளித்த பேட்டியில் 'இயக்குனர் எம் ராஜேஷ் படங்கள் எல்லாமே ஒரு ஃபேமிலி சப்ஜெக்ட் படங்கள் தான், அதில் காமெடியும் இருக்கும், ஆனால் அவர் முழுக்க முழுக்க காமெடி

இந்த மாதிரி ஒரு மனிதரை நான் பார்த்ததே இல்லை.. 'எல்.ஐ.சி' நடிகர் குறித்து விக்னேஷ் சிவன்..!

இயக்குனர் விக்னேஷ் சிவன் தற்போது 'எல்ஐசி' என்ற 'லவ் இன்சூரன்ஸ் கார்ப்பரேஷன்' என்ற படத்தை இயக்கி வரும் நிலையில் இந்த படத்தில் நடிக்கும் நடிப்பு அரக்கன் குறித்து தனது சமூக வலைதளத்தில்

ஹாட்ஸ்டாரின் அசத்தல் அறிவிப்பு..இதயத்தை வருடும் புதிய சீரிஸ்..!

டிஸ்னி ஹாட்ஸ்டாரில் பல புதிய வெப் சீரிஸ் அவ்வப்போது வெளியாகி மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வரும் நிலையில் தற்போது ஒரு மருத்துவமனையின் பின்னணியில், இளமை துள்ளும்

இயக்குனர் கனவில் இருந்த 'அஞ்சாதே' நடிகர் திடீர் மரணம்.. என்ன ஆச்சு?

'அஞ்சாதே' படத்தில் நடித்த நடிகர் விரைவில் இயக்குனராக போகும் கனவில் இருந்த நிலையில் திடீரென அவர் மூச்சு திணறல் காரணமாக காலமாகிவிட்டார் என்ற தகவல் திரையுலகினர்களை அதிர்ச்சியடைய செய்துள்ளது.

திரைக்கு வரும் முன்பே சர்வதேச அங்கீகாரத்தை பெற்ற சிவகார்த்திகேயன் படம்..!

சிவகார்த்திகேயன் தயாரிப்பில் சூரி நடிப்பில் உருவாகி வரும் 'கொட்டுக்காளி' என்ற திரைப்படம் விரைவில் திரையரங்குகளில் ரிலீசாக இருக்கும் நிலையில் ரிலீசுக்கு முன்பே இந்த படம் சர்வதேச