சிம்புவின் 'மாநாடு' குறித்த முக்கிய அறிவிப்பை வெளியிட்ட தயாரிப்பாளர்

  • IndiaGlitz, [Monday,July 20 2020]

சிம்பு நடிப்பில், சுரேஷ் காமாட்சி தயாரிப்பில், வெங்கட்பிரபு இயக்கும் ’மாநாடு’ திரைப்படத்தின் படப்பிடிப்பு கடந்த பிப்ரவரி மாதம் தொடங்கி விறுவிறுப்பாக நடந்து வந்தது என்பது தெரிந்ததே. சென்னையிலுள்ள விஜிபி கோல்டன் பீச் உள்பட ஒருசில இடங்களில் இந்த படத்தின் படப்பிடிப்பு நடந்து கொண்டிருந்தபோது திடீரென கொரோனா வைரஸ் ஊரடங்கு காரணமாக படப்பிடிப்பு நிறுத்தப்பட்டது

இந்த நிலையில் இந்த கொரோனா விடுமுறையில் பல திரைப்படங்களின் அப்டேட்டுக்கள் வெளிவந்து கொண்டிருக்கும் நிலையில் ‘மாநாடு’ திரைப்படத்தின் எந்த அப்டேட்டும் வெளிவராததால் சிம்பு ரசிகர்கள் அதிருப்தி அடைந்தனர். இதனையடுத்து இந்த படத்தின் தயாரிப்பாளர் சுரேஷ் காமாட்சி தனது சமூக வலைத்தளத்தில் ‘மாநாடு’ படம் குறித்து ஒரு டுவிட்டை பதிவு செய்துள்ளார்.

‘மாநாடு’ படம் குறித்த அப்டேட்டை பலரும் அடிக்கடி கேட்டு வருகின்றனர். தற்போது நாங்கள் மட்டுமின்றி தமிழ் திரையுலகமே அரசின் அனுமதிக்காக காத்திருக்கின்றோம். அரசு பச்சைக்கொடி காட்டியவுடன் ‘மாநாடு’ படத்தின் படப்பிடிப்பு தொடங்கப்படும் என்றும் தெரிவித்துள்ளார்.

யுவன் சங்கர் ராஜா இசையில் உருவாகி வரும் இந்த படத்தில் சிம்பு ஜோடியாக கல்யாணி பிரியதர்ஷன் நடித்துவருகிறார். மேலும் இந்த படத்தில் பாரதிராஜா, எஸ்ஏ சந்திரசேகர், எஸ்ஜே சூர்யா, பிரேம்ஜி அமரன், அரவிந்த் ஆகாஷ் உள்பட பலர் நடித்து வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது

More News

கணவரின் உடலை தள்ளுவண்டியில் தள்ளிச்சென்ற மனைவி: கொரோனா பயத்தால் மறக்கப்பட்ட மனிதநேயம்

கொரோனா அச்சம் காரணமாக இறந்த கணவரின் உடலை இறுதிச்சடங்கு செய்ய யாரும் உதவி செய்யாததால் சுடுகாட்டிற்கு அவரது மனைவி தனது மகன்களுடன் தள்ளுவண்டியில் தள்ளிச்

திருப்பதி கோயில் முன்னாள் பிரதான அர்ச்சகர் கொரோனாவால் உயிரிழப்பு: கோயில் மூடப்படுமா?

திருப்பதி ஏழுமலையான் கோயிலில் முதல் முறையாக கொரோனா தொற்றால் அர்ச்சகர் ஒருவர் உயிரிழந்துள்ளதாக வெளிவந்த செய்தி பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது

ப்ரியாமணியின் பாடிபில்டிங்கிற்கு உதவிய கணவர்: வைரலாகும் புகைப்படம்

கடந்த 2000ம் ஆண்டுகளில் தமிழ் சினிமாவின் முன்னணி நடிகைகளில் ஒருவராக இருந்தவர் நடிகை பிரியாமணி. நடிகர் கார்த்தி நடித்த முதல் படமான 'பருத்தி வீரன்' திரைப்படத்தில் சிறப்பாக நடித்ததற்காக

அர்னாப் உடன் நேரலை விவாதத்தின்போது என்ன செய்து கொண்டிருந்தார் கஸ்தூரி: வைரலாகும் வீடியோ

நடிகையும் பிக்பாஸ் போட்டியாளர்களில் ஒருவருமான கஸ்தூரி அவ்வப்போது தனது சமூக வலைத்தளத்தில் சமூக கருத்துக்கள் குறித்து ஆவேசமாக பதிவு செய்வார் என்பது தெரிந்ததே

5000ஐ நெருங்கியது ஒருநாள் கொரோனா பாதிப்பு: புதிய உச்சத்தால் தமிழகத்தில் அதிர்ச்சி

கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டு வருபவர்களின் எண்ணிக்கை கடந்த சில நாட்களாக 4000க்கும் அதிகமாக இருந்த நிலையில் ஒன்று ஒரே நாளில் பாதிப்பு எண்ணிக்கை 5000ஐ நெருங்கியுள்ளது