கார்த்தியின் 'கைதி 2' உருவாகுமா? தயாரிப்பாளர் எஸ்.ஆர்.பிரபு தகவல்!

  • IndiaGlitz, [Tuesday,May 25 2021]

கார்த்தி நடிப்பில் இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் உருவாக்கிய ’கைதி’ திரைப்படம் கடந்த 2019ஆம் ஆண்டு தீபாவளி தினத்தில் வெளியானது. விஜய்யின் ’பிகில்’ திரைப்படம் வெளியான தினத்தில் தான் இந்த படமும் வெளியானது என்றாலும் இந்த படம் 24 கோடி ரூபாய் பட்ஜெட்டில் தயாராகி 105 கோடி ரூபாய் வசூல் செய்து மிகப்பெரிய லாபத்தை பெற்றது என்பது குறிப்பிடத்தக்கது

இந்த நிலையில் ‘கைதி 2’ படம் குறித்த தகவல்கள் அவ்வப்போது வெளிவந்து கொண்டிருக்கின்றன. ஏற்கனவே இயக்குனர் லோகேஷ் கனகராஜ் ‘கைதி 2’ நிச்சயம் உருவாகும் என்றும் தெரிவித்திருந்தார். இந்த நிலையில் இதுகுறித்து தயாரிப்பாளர் எஸ்ஆர் பிரபு அவர்கள் கூறியபோது ‘கைதி 2’ படம் நிச்சயம் உருவாகும் என்றும் அதற்கான பணிகள் நடைபெற்று வருவதாகவும் தெரிவித்துள்ளார்

கார்த்தி தற்போது மணிரத்னம் இயக்கிவரும் ’பொன்னியின் செல்வன்’ திரைப்படத்தில் நடித்துக் கொண்டிருக்கிறார். அதேபோல் கமல்ஹாசன் நடிக்கும் ’விக்ரம்’ திரைப்படத்தை லோகேஷ் கனகராஜ் இயக்கவுள்ளார். இந்த இரண்டு படங்களும் முடிந்தவுடன் மீண்டும் கார்த்தி மற்றும் லோகேஷ் கனகராஜ் ‘கைதி 2’ படத்திற்காக இணைவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

More News

இறந்து விடுவேன் என பயமாக உள்ளது...! வீடியோ வெளியிட்டு கதறும் பெண்...!

ராமநாதபுரம்  மாவட்டத்தில் கொரோனா பாதிக்கப்பட்ட பெண், இறந்து விடுவேன் என பயமாக உள்ளது என்று வெளியிட்ட வீடியோ காண்போர் மனதை பதைபதைக்க செய்கின்றது

பட்டுக்குட்டி, செல்லக்குட்டி: 'குக் வித் கோமாளி' புகழ் கூறிய பிறந்த நாள் வாழ்த்து யாருக்கு தெரியுமா?

விஜய் டிவியில் சமீபத்தில் முடிவடைந்த 'குக் வித் கோமாளி என்ற நிகழ்ச்சி மிகப்பெரிய அளவில் பிரபலமானது என்பதும் இந்த நிகழ்ச்சியில் கலந்துகொண்ட 'குக்'கள், கோமாளிகள்,

சேர்ந்து வாழ்வதைவிட பிரிந்து வாழ்வதில் சந்தோஷம்: அப்பா-அம்மா விவாகரத்து குறித்து ஸ்ருதிஹாசன்!

தன்னுடைய அப்பாவும் அம்மாவும் சேர்ந்து வாழ்வதை விட பிரிந்து வாழும் போதுதான் சந்தோசமாக இருந்தார்கள் என நடிகை சுருதிஹாசன் தெரிவித்திருப்பது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது 

இந்த நடிகருடன் ரொமான்ஸ் செய்ய வேண்டும்: சமந்தா தெரிவித்த விருப்பம்!

திருமணத்திற்கு பின்னரும் தமிழ் தெலுங்கு ஆகிய இரண்டு மொழிகளிலும் பிஸியாக இருக்கும் நடிகை என்றால் அது சமந்தா தான் என்பது குறிப்பிடத்தக்கது.

என்னை போலவே நீங்களும் நடந்துக்கோங்க: நடிகை கீர்த்தி சுரேஷின் வைரல் வீடியோ!

கொரோனா வைரஸ் பரவலை கட்டுப்படுத்தும் வகையில் அனைவரும் முகக்கவசம் அணிய வேண்டும் என்றும் ஊரடங்கை கடைபிடிக்க வேண்டும் என்றும் நடிகை கீர்த்தி சுரேஷ் வேண்டுகோள் விடுத்துள்ளார்