நயன்தாராவின் 'அறம்' படத்திற்கு பிரபல தயாரிப்பாளர் வாழ்த்து

  • IndiaGlitz, [Saturday,November 11 2017]

லேடி சூப்பர் ஸ்டார் நயன்தாரா நடித்த 'அறம்' திரைப்படம் நேற்று வெளியாகி சமூக இணணயதளங்கள், விமர்சகர்கள் மற்றும் ஊடகங்கள் என முழுக்க முழுக்க பாசிட்டிவ் விமர்சனங்களை பெற்று வருகிறது. இதுவரை ஒரே ஒரு நெகட்டிவ் ரிசல்ட் கூட இந்த படத்திற்கு வரவில்லை என்பது ஒரு ஆச்சரியமான விஷயம்

இந்த நிலையில் நயன்தாராவின் அடுத்த படமான 'வேலைக்காரன்' படத்தை தயாரித்துள்ள ஆர்.டி.ராஜா, 'அறம்' படத்திற்கு தனது வாழ்த்துக்களையும், நயன்தாராவின் திறமையை பாராட்டியும் தனது சமூக வலைத்தளத்தில் பதிவு செய்துள்ளார். அவர் தனது சமூக வலைத்தளத்தில் கூறியிருப்பதாவது:

சிறந்த படங்களில் ஒன்று அறம். இயக்குனர் ந.கோபி நயினாருக்கு முதல் பாராட்டு. நயன்தாராவின் கதை அறிவும், உழைப்பும் வேலைக்காரனில் பணிபுரியும்போது வியப்பில் ஆழ்த்தியது. மிகச்சிறந்த நடிகையாக உச்சங்களைத் தொடுவார். ராஜேஸ் தகுதியான, மிகச் சிறந்த தயாரிப்பாளர். அறம் குழுவிற்கு வாழ்த்துகள்' என்று கூறியுள்ளார்.

More News

நயன்தாராவுக்கு 100க்கு 100 மார்க்: விக்னேஷ்சிவன் ஆச்சரியம்

நயன்தாரா நடித்த 'அறம்' திரைப்படம் எதிர்பார்த்ததை விட பல மடங்கு விமர்சகர்களால் பாராட்டப்பட்டு வருவதால் நயன்தாரா, இயக்குனர் கோபிநயினார் உள்பட படக்குழுவினர் அனைவரும் உற்சாகத்தில் உள்ளனர்.

விக்ரம் மகன் துருவ் படத்தின் டைட்டில் அறிவிப்பு

சீயான் விக்ரம் மகன் துருவ், தெலுங்கில் சூப்பர் ஹிட் ஆன 'அர்ஜூன்ரெட்டி' படத்தின் ரீமேக்கில் அறிமுகமாகிறார் என்பதும் இந்த படத்தை தேசிய விருது பெற்ற இயக்குனர் பாலா இயக்கவுள்ளார் என்பதும் தெரிந்ததே

வீடுதேடி வரும் வங்கி சேவை: ரிசர்வ் வங்கி அதிரடி அறிவிப்பு

வங்கிகளில் பணம் எடுத்தல், பணம் செலுத்துதல் காசோலைகள் மற்றும் டிடி ஆகியவற்றுக்காக மணிக்கணக்கில் காத்திருக்க வேண்டிய நிலையில் இவ்வித சேவைகளுக்காக வங்கி அதிகாரிகள் இனி வீடுதேடி வருவார்கள்

விஜய்சேதுபதிக்கு பிரபல அரசியல் கட்சி தலைவர் பாராட்டு

நடிகர் விஜய்சேதுபதி தனியார் சேமியா நிறுவனம் ஒன்றின் விளம்பரத்தில் நடித்ததால் கிடைத்த ரூ.50 லட்சத்தை அப்படியே கல்வியில் பின் தங்கிய மாவட்டமாக விளங்கி வரும் அரியலூர் மாவட்டத்திற்கு நன்கொடை அளித்தார்

கொல்கத்தா பயணம் அரசியல் பயணமா? மம்தாவை சந்தித்த பின் கமல் பேட்டி

உலக நாயகன் கமல்ஹாசன் கொல்கத்தாவில் நடைபெறும் சர்வதேச திரைப்பட விழாவில் கலந்து கொள்ள சென்றார் என்றும், அதனுடன் மேற்குவங்க முதல்வர் மம்தா பானர்ஜியை சந்திக்கும் திட்டமும் கமலிடம் இருந்ததாகவும்