திருமணத்திற்கு பின் முதல் பிறந்தநாள்.. மனைவி மகாலட்சுமிக்கு விலை மதிப்பில்லா பரிசு கொடுத்த ரவீந்தர்..!

  • IndiaGlitz, [Wednesday,March 22 2023]

பிரபல தயாரிப்பாளர் ரவீந்தர் தொலைக்காட்சி நடிகை மகாலட்சுமியை கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் திருமணம் செய்து கொண்டார் என்பதும் திருப்பதியில் நடந்த இந்த திருமணம் திரையுலகில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது என்பது தெரிந்ததே.

சமீபத்தில் திருமணம் ஆகி 100 நாள் கொண்டாட்டத்தை இருவரும் கொண்டாடிய நிலையில் தற்போது திருமணத்திற்கு பின்னர் மகாலட்சுமியின் முதல் பிறந்தநாளுக்கு விலை மதிப்பில்லா பரிசை ரவீந்திரன் தனது மனைவி மகாலட்சுமிக்கு கொடுத்து உள்ளார். அந்த விலைமதிப்பில்லா பரிசு ஒரு முழம் மல்லிகை பூ என்பது குறிப்பிடத்தக்கது. இது குறித்து தயாரிப்பாளர் ரவீந்திரன் தனது சமூக வலைதளத்தில் பதிவு செய்திருப்பதாவது:

பிறந்தநாள்... ஆம். இன்று என் மகாலக்ஷ்மிக்கு பிறந்தநாள்.

பிரம்மனின் மொத்த கற்பனையாய் எனக்கு விற்பனையானவள் என் மகாலக்ஷ்மி. வாழ்க்கைல அது இஷ்டத்துக்கு ஒன்னு வந்தாதான் அத அதிர்ஷ்டம்னு சொல்லுவாங்க. அந்த அதிர்ஷ்டம்தான் என் மகாலக்ஷ்மி. ஒரு மனிதன் தான் பிறந்ததிலிருந்து எல்லா விஷேச நாட்களையும் கொண்டாடுவான். ஆனா அவன் பிறந்தத ஒரு விசேஷமா கொண்டாடுறது அவன் குடும்பம்தான். ஒரு காலகட்டத்துக்கு அப்புறம் அத கொண்டாடுறது அவனால உருவாக்கப்பட்ட குடும்பம். அப்படி உன்னால உருவாக்கப்பட்ட குடும்பத்தோட ஒரு ஆளாதான் உன் பிறந்தநாள நா கொண்டாடுறேன்.

நம்ம வாழ்க்கைல நாம நிறைய பேர நேசிப்போம். அவங்க நம்மல நேசிக்கனும்னு அவசியம் இல்ல.அவங்க நம்ம மேல மரியாதையாவும் அன்பாவும் இருப்பாங்க. ஆனா நாம பல பேர நேசிக்க மறந்துருப்போம். அவங்க நம்மல அளவுக்கு அதிகமா நேசிக்குறவங்களா இருப்பாங்க. அப்படி ஒன்னு என் கண்ணுல தென்பட்டப்பதான் உன்ன கல்யாணம் பண்ணிக்கனும்னே தோனுச்சு.

மகாலக்ஷ்மி.. காலைல இருந்து ஒரே யோசனை. உன் பிறந்தநாளுக்கு என்ன செய்றதுனு. 12 மணிக்கு கேக் வெட்றது ஸ்வீட் குடுக்குறது முதியோர் இல்லம் அனாதை இல்லன்னு போய் சாப்பாடு போடுறது பிடிச்ச giftவாங்கி குடுக்குறது இப்டி எல்லாமே எப்பையுமே உனக்கு எல்லாரும் பண்றதுதான். ஆனா எனக்கு உன்ன பிடிக்கும். அதனால எனக்கு பிடிச்ச ஒன்ன உனக்கு கொடுக்கனும்னு தோனுச்சு. அப்படி ஒரு விஷயம்தான் இந்த 'மல்லிகை பூ'. நாம நம்ம தேவைக்கு எத வேணாலும் வாங்கிக்க முடியும்ற போது இந்த பூவ உனக்கு குடுக்குறதுக்கு ஒரே காரணம் தான்.

இந்த பூவிற்கு நிகர் ஏதுமில்ல என் மகாலக்ஷ்மிக்கு நிகரும் யாருமில்ல. என்னப் பொருத்தவர இந்த பூ மிகப்பெரிய ஒரு gift உனக்கு நா இன்னைக்கு குடுக்குறதுக்கு. மத்த பொருள நா வாங்கி குடுக்குறதுல இருக்குற அன்ப விட அன்பே உருவான இந்த பூ வில் அதிகமா இருக்கு. So my humble gift வாங்கிக்கோ. இதுக்கப்புறம் உனக்கு பிடிச்ச எந்த பொருளையும் காசு குடுத்து நீ வாங்கிக்கலாம். ஆனா இந்த பூ என் வாழ்க்கைலயே முதன்முதலா ஒரு பொண்ணுக்கு நா வாங்கி குடுக்குற gift. அது உனக்குதான்.

I love you mahalakshmi

Happy birthday

More News

நீச்சலுடை காஸ்ட்யூம்.. கமல்ஹாசனின் முன்னாள் மனைவிக்கு பாராட்டு தெரிவித்த நடிகை..!

நீச்சலுடைய காஸ்ட்யூம்களை சிறப்பாக வடிவமைத்து கொடுத்த காஸ்டியூம் டிசைனரான கமல்ஹாசனின் முன்னாள் மனைவி வாணி கணபதிக்கு பாராட்டு தெரிவித்து நடிகை ராதா தனது

தனக்குத்தானே கண்ணீர் அஞ்சலி பேனர் வைத்த தமிழ் நடிகர்.. வைரல் புகைப்படம்..!

தமிழ் திரை உலகின் நடிகர் மற்றும் இயக்குனர் தனக்கு தானே கண்ணீர் அஞ்சலி பேனர் வைத்துக் கொண்ட புகைப்படத்தை தனது சமூக வலைதளத்தில் பதிவு செய்துள்ள நிலையில் அந்த புகைப்படம் வைரலாகி வருகிறது. 

சிம்ரனின் இரண்டாவது மகனா இவர்? புகைப்படங்களை பார்த்து ரசிகர்கள் ஆச்சரியம்..!

நடிகை சிம்ரனின் இரண்டாவது மகனின் பிறந்த நாள் கொண்டாடப்பட்டுள்ளதை அடுத்து இது குறித்த புகைப்படங்களை அவர் தனது சமூக வலைதளங்களில் வெளியிட்டுள்ளார்.

குறிபார்த்து அடித்த நதியா: படப்பிடிப்பின் இடையே எடுத்த வீடியோ வைரல்..!

நடிகை நதியா வில்லிலிருந்து குறி பார்த்து அம்பை விட்ட வீடியோ அவரது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவாகியுள்ள நிலையில் அந்த வீடியோ வைரல் ஆகி வருகிறது .

44 வயதில் தொழிலதிபருடன் திருமணம்: ரஜினி, கமல் பட நடிகைக்கு ரசிகர்கள் வாழ்த்து..!

ரஜினி, கமல், சரத்குமார் உள்பட பல பிரபலங்களின் படங்களில் நடித்த நடிகை ஒருவர் 44 வயதில் திருமணம் செய்து கொண்டதை அடுத்து அவருக்கு ரசிகர்கள் தங்களது வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்.