சிம்பு பிரச்சனை முடிந்தது.. ரஜினியும் உள்ளே வந்துவிட்டார்.. தயாரிப்பாளர் ஐசரி கணேஷ்..!

  • IndiaGlitz, [Friday,May 17 2024]

உலகநாயகன் கமல்ஹாசன் நடிப்பில் மணிரத்னம் இயக்கத்தில் உருவாகி வரும் ’தக்லைஃப்’ திரைப்படத்தில் நடிகர் சிம்பு முக்கிய வேடத்தில் நடிப்பதாக சமீபத்தில் படக்குழுவினர் அதிகாரப்பூர்வமாக அறிவித்தனர் என்பதை பார்த்தோம். இந்த நிலையில் இந்த அறிவிப்பு வெளியான உடனே பிரபல தயாரிப்பாளர் ஐசரி கணேஷ் ’தக்லைஃப்’ படத்தில் சிம்பு நடிப்பதற்கு தனது எதிர்ப்பை தெரிவித்தார்.

வேல்ஸ் பிலிம்ஸ் இன்டர்நேஷனல் நிறுவனத்தின் தயாரிப்பில் உருவாக இருக்கும் 'கொரோனா குமார்’ படத்தில் நடிப்பதாக சிம்பு ஒப்பந்தம் செய்யப்பட்டிருந்தார் என்றும் ஆனால் அந்த ஒப்பந்தப்படி அவர் நடிக்காமல் ’தக்லைஃப்’ படத்தில் நடிக்க ஒப்புக் கொண்டிருக்கிறார் என்றும் எனவே ’தக்லைஃப்’ படத்தில் சிம்பு நடிக்க கூடாது என்றும் தயாரிப்பாளர் சங்கத்தில் அவர் புகார் செய்தார்.இந்த நிலையில் இது குறித்து பேச்சுவார்த்தை நடத்தப்பட்டு சுமூக முடிவு எடுக்கப்படும் என்று தயாரிப்பாளர் சங்கத்தின் நிர்வாகிகள் கூறியிருந்த நிலையில் தற்போது சினிமா விழா ஒன்றில் கலந்து கொண்ட ஐசரி கணேஷ் சிம்பு பிரச்சனை முடிந்து விட்டதாக தெரிவித்தார். தங்கள் நிறுவனத்தின் தயாரிப்பில் நடிகர் சிம்பு நடிக்க ஒப்புக் கொண்டதை அடுத்து அந்த பிரச்சனை முடிந்ததாகவும் விரைவில் சிம்பு நடிக்கும் படம் குறித்த அறிவிப்பு வெளியாகும் என்றும் தெரிவித்தார்.

அதுமட்டுமின்றி சமீபத்தில் தான் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தை சந்தித்ததாகவும் அப்போது அவர் எங்கள் நிறுவனத்துக்கு ஒரு படம் நடிக்க ஒப்பு கொண்டதாகவும் அவர் கூறியுள்ளார். இதனை அடுத்து வேல்ஸ் பிலிம்ஸ் நிறுவனத்தின் தயாரிப்பில் ரஜினிகாந்த் நடிக்கும் படம் குறித்த அறிவிப்பு விரைவில் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

ரஜினிகாந்த் நடிக்கும் அடுத்த திரைப்படமான ’கூலி’ திரைப்படத்தை சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிக்க இருக்கும் நிலையில் அனேகமாக ’தலைவர் 172’படத்தை வேல்ஸ் பிலிம்ஸ் நிறுவனம் தயாரிக்க வாய்ப்பு இருப்பதாக கூறப்படுகிறது.

More News

விஜய் பட நாயகியை தட்டி தூக்கிய சூர்யா.. எதிர்பார்ப்பை எகிற வைக்கும் தகவல்..!

சூர்யா நடிக்கும் அடுத்த திரைப்படத்தில் விஜய் படத்தில் நாயகியாக நடித்த நடிகை ஒப்பந்தம் செய்யப்பட்டிருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.

விஜய் சேதுபதி ரசிகர்களுக்கு நாளை செம்ம விருந்து.. முக்கிய அறிவிப்பு..!

மக்கள் செல்வன் விஜய் சேதுபதி தனது 51 வது படம் குறித்த முக்கிய அறிவிப்பை நாளை வெளியிட இருப்பதாக அறிவித்துள்ள நிலையில் அவரது ரசிகர்களுக்கு நாளை செம விருந்து காத்திருக்கிறது என்று எதிர்பார்க்கப்படுகிறது.

படிக்கிற பொண்ணை படுக்க கூப்பிட தைரியம் இருக்குன்னா, எதிர்த்து கேட்க தைரியம் வரக்கூடாதா? 'பிடி சார்' டிரைலர்..!

ஹிப் ஹாப் தமிழா ஆதி நடித்துள்ள 'பிடி சார்' என்ற திரைப்படம் மே 24ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாக இருக்கும் நிலையில் இந்த படத்தின் டிரைலர் சற்றுமுன் வெளியாகி இணையத்தில் வைரல் ஆகி வருகிறது.

இசைஞானியை சந்தித்த தமிழக அமைச்சர் அன்பில் மகேஷ்.. மறைவுக்கு முன் பவதாரிணி செய்த சேவை..

இசைஞானி இளையராஜாவை தமிழக பள்ளி கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் அவர்கள் இன்று சந்தித்துள்ள நிலையில் இந்த சந்திப்பு குறித்த புகைப்படம் அமைச்சரின் சமூக வலைதள பக்கத்தில்

35 நாட்களில் முடித்துவிட்டேன்.. சந்தோஷமான செய்தி சொன்ன இளையராஜா..!

சைஞானி இளையராஜா இன்று மாலை 6:00 மணிக்கு முக்கிய அறிவிப்பை வெளியிட இருப்பதாக ஏற்கனவே அறிவித்திருந்த நிலையில் சற்றுமுன் அவர் அந்த முக்கிய அறிவிப்பு என்ன